திருப்பூர்: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து பாசிச சக்திகளுடன் கூட்டு சேர்ந்த அதிமுகவை இனி வரும் தேர்தலில் தோற்கடிக்கச் செய்வோம் என திருப்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மேலாண்மை குழு தலைவர் சுலைமான் தெரிவித்தார்.
திருப்பூர்: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து பாசிச சக்திகளுடன் கூட்டு சேர்ந்த அதிமுகவை இனி வரும் தேர்தலில் தோற்கடிக்கச் செய்வோம் என திருப்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மேலாண்மை குழு தலைவர் சுலைமான் தெரிவித்தார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், திருப்பூர் மாநகராட்சி எதிரே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இஸ்லாமியர்கள் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்,
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மேலாண்மை குழு தலைவர் சுலைமான், இந்துத்துவாவை கொண்டு வருவதற்காக மத்திய அரசு மேற்கொண்டுள்ள இந்த சட்ட திருத்த மசோதா சிறுபான்மையினரை அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும், இதற்கு எதிராக வாக்களிக்க வேண்டிய அதிமுக இரு அவைகளிலும் ஆதரவாக வாக்களித்து பாசிச சக்திகளுக்கு துணையாக சென்றுள்ளதால் இனி வரும் தேர்தலில் அதிமுகவை தோற்கடிப்போம் எனவும் தெரிவித்தார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், திருப்பூர் மாநகராட்சி எதிரே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இஸ்லாமியர்கள் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்,
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மேலாண்மை குழு தலைவர் சுலைமான், இந்துத்துவாவை கொண்டு வருவதற்காக மத்திய அரசு மேற்கொண்டுள்ள இந்த சட்ட திருத்த மசோதா சிறுபான்மையினரை அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும், இதற்கு எதிராக வாக்களிக்க வேண்டிய அதிமுக இரு அவைகளிலும் ஆதரவாக வாக்களித்து பாசிச சக்திகளுக்கு துணையாக சென்றுள்ளதால் இனி வரும் தேர்தலில் அதிமுகவை தோற்கடிப்போம் எனவும் தெரிவித்தார்.