கோத்தகிரி சாலையில் வாகனங்களை வழிமறிக்கும் ஒற்றை காட்டுயானை; சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை

கோவை: மேட்டுப்பாளையம் அருகே கோத்தகிரி சாலையில் வாகனங்களை வழிமறித்த ஒற்றை காட்டுயானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். வாகனங்களை கவனத்துடன் இயக்குமாறும் சாலையில் வாகனங்களை நிறுத்தி இறங்க வேண்டாம் என சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

கோவை: மேட்டுப்பாளையம் அருகே கோத்தகிரி சாலையில் வாகனங்களை வழிமறித்த ஒற்றை காட்டுயானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். வாகனங்களை கவனத்துடன் இயக்குமாறும் சாலையில் வாகனங்களை நிறுத்தி இறங்க வேண்டாம் என சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் சாலையானது அடர்ந்த வனபப்பகுதியில் அமைந்துள்ளது. இதில், குன்னூர் மற்றும் கோத்தகிரி ஆகிய இரு சாலைகள் உள்ள நிலையில் சமீபகாலமாக கோத்தகிரி சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

குறிப்பாக, வனச்சாலையை கடக்க வரும் காட்டுயானைகள் சாலை மார்க்கமாகச் செல்லும் வாகனங்களை அச்சுறுத்தும் வகையில் சாலை ஓரங்களில் நிற்பதால் சுற்றுலா வாகனங்களை இடையில் நிறுத்த வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.



இந்த நிலையில், இன்று மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் இரண்டாவது கொண்டை ஊசிக்கு மேல் பகுதியில் வாகனங்கள் சென்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த ஒற்றை யானை ஒன்று சாலையின் நடுவே நின்று வாகனங்களை மறுத்தது. மேலும் வாகனங்களை மீண்டும் நகர விடாமல் அங்கேயே சுற்றி வந்தது, பின்னர் அங்கு நின்றுகொண்டிருந்த ஒரு காரையும் தாக்கி சேதப்படுத்தியது. இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் வாகன ஓட்டிகள் சப்தம் எழுப்பியதால் அந்த யானை அங்கிருந்து சென்றது. தற்போது காட்டு யானைகள் நடமாட்டம் கோத்தகிரி சாலையில் அதிக அளவில் இருப்பதாக கூறும் வனத்துறையினர் வாகனங்களை கவனத்துடன் இயக்குமாறும் சாலையில் வாகனங்களை நிறுத்தி இறங்க வேண்டாம் என சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....