கோவை: மேட்டுப்பாளையம் அருகே கோத்தகிரி சாலையில் வாகனங்களை வழிமறித்த ஒற்றை காட்டுயானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். வாகனங்களை கவனத்துடன் இயக்குமாறும் சாலையில் வாகனங்களை நிறுத்தி இறங்க வேண்டாம் என சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
கோவை: மேட்டுப்பாளையம் அருகே கோத்தகிரி சாலையில் வாகனங்களை வழிமறித்த ஒற்றை காட்டுயானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். வாகனங்களை கவனத்துடன் இயக்குமாறும் சாலையில் வாகனங்களை நிறுத்தி இறங்க வேண்டாம் என சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் சாலையானது அடர்ந்த வனபப்பகுதியில் அமைந்துள்ளது. இதில், குன்னூர் மற்றும் கோத்தகிரி ஆகிய இரு சாலைகள் உள்ள நிலையில் சமீபகாலமாக கோத்தகிரி சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக, வனச்சாலையை கடக்க வரும் காட்டுயானைகள் சாலை மார்க்கமாகச் செல்லும் வாகனங்களை அச்சுறுத்தும் வகையில் சாலை ஓரங்களில் நிற்பதால் சுற்றுலா வாகனங்களை இடையில் நிறுத்த வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், இன்று மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் இரண்டாவது கொண்டை ஊசிக்கு மேல் பகுதியில் வாகனங்கள் சென்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த ஒற்றை யானை ஒன்று சாலையின் நடுவே நின்று வாகனங்களை மறுத்தது. மேலும் வாகனங்களை மீண்டும் நகர விடாமல் அங்கேயே சுற்றி வந்தது, பின்னர் அங்கு நின்றுகொண்டிருந்த ஒரு காரையும் தாக்கி சேதப்படுத்தியது. இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் வாகன ஓட்டிகள் சப்தம் எழுப்பியதால் அந்த யானை அங்கிருந்து சென்றது. தற்போது காட்டு யானைகள் நடமாட்டம் கோத்தகிரி சாலையில் அதிக அளவில் இருப்பதாக கூறும் வனத்துறையினர் வாகனங்களை கவனத்துடன் இயக்குமாறும் சாலையில் வாகனங்களை நிறுத்தி இறங்க வேண்டாம் என சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் சாலையானது அடர்ந்த வனபப்பகுதியில் அமைந்துள்ளது. இதில், குன்னூர் மற்றும் கோத்தகிரி ஆகிய இரு சாலைகள் உள்ள நிலையில் சமீபகாலமாக கோத்தகிரி சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக, வனச்சாலையை கடக்க வரும் காட்டுயானைகள் சாலை மார்க்கமாகச் செல்லும் வாகனங்களை அச்சுறுத்தும் வகையில் சாலை ஓரங்களில் நிற்பதால் சுற்றுலா வாகனங்களை இடையில் நிறுத்த வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், இன்று மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் இரண்டாவது கொண்டை ஊசிக்கு மேல் பகுதியில் வாகனங்கள் சென்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த ஒற்றை யானை ஒன்று சாலையின் நடுவே நின்று வாகனங்களை மறுத்தது. மேலும் வாகனங்களை மீண்டும் நகர விடாமல் அங்கேயே சுற்றி வந்தது, பின்னர் அங்கு நின்றுகொண்டிருந்த ஒரு காரையும் தாக்கி சேதப்படுத்தியது. இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் வாகன ஓட்டிகள் சப்தம் எழுப்பியதால் அந்த யானை அங்கிருந்து சென்றது. தற்போது காட்டு யானைகள் நடமாட்டம் கோத்தகிரி சாலையில் அதிக அளவில் இருப்பதாக கூறும் வனத்துறையினர் வாகனங்களை கவனத்துடன் இயக்குமாறும் சாலையில் வாகனங்களை நிறுத்தி இறங்க வேண்டாம் என சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.