கோவை: கோவை காந்திபுரம் அருகே பெற்றோர்கள் இல்லாத நேரத்தில் சிறுமிகள் வீட்டில் அகல் விளக்கு ஏற்றிய போது எதிர்பாராதவிதமாக வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை காந்திபுரம் அருகே பெற்றோர்கள் இல்லாத நேரத்தில் சிறுமிகள் வீட்டில் அகல் விளக்கு ஏற்றிய போது எதிர்பாராதவிதமாக வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை காந்திபுரம் 5வது வீதியில் வசித்து வரும் சுரேஷ் பிளம்பிங் தொழில் செய்து வருகிறார். இவர் தனது ஐந்தாம் வகுப்பு மற்றும் மூன்றாம் வகுப்பு படித்து வரும் இரு மகள்களை வீட்டிலேயே விட்டு விட்டு தனது மனைவி மற்றும் மகனை அழைத்துக்கொண்டு திருச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதைத்தொடர்ந்து சிறுமிகளின் தாயார் நேற்று மாலை தொலைபேசி மூலம் அழைத்து அவர்களை வீட்டில் அகல் விளக்கு ஏற்றும்படி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அகல்விளக்கை மெத்தையருகே ஏற்றிய சிறுமிகள் கதவை பூட்டி விட்டு விளையாட சென்றுள்ளனர்.

பின்னர் விளக்கு தவறுதலாக மெத்தையில் பட்டு, வீடு முழுக்க தீ பரவியது.
இதையடுத்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தங்களது கடும் முயற்சியால் தீயானது வேற பகுதிகளுக்குப் பரவாமல் தடுத்தனர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து ரத்தினபுரி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.