கோவை காந்திபுரம் அருகே அகல் விளக்கு ஏற்றிய போது எதிர்பாராதவிதமாக தீ விபத்து

கோவை: கோவை காந்திபுரம் அருகே பெற்றோர்கள் இல்லாத நேரத்தில் சிறுமிகள் வீட்டில் அகல் விளக்கு ஏற்றிய போது எதிர்பாராதவிதமாக வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை காந்திபுரம் அருகே பெற்றோர்கள் இல்லாத நேரத்தில் சிறுமிகள் வீட்டில் அகல் விளக்கு ஏற்றிய போது எதிர்பாராதவிதமாக வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை காந்திபுரம் 5வது வீதியில் வசித்து வரும் சுரேஷ் பிளம்பிங் தொழில் செய்து வருகிறார். இவர் தனது ஐந்தாம் வகுப்பு மற்றும் மூன்றாம் வகுப்பு படித்து வரும் இரு மகள்களை வீட்டிலேயே விட்டு விட்டு தனது மனைவி மற்றும் மகனை அழைத்துக்கொண்டு திருச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதைத்தொடர்ந்து சிறுமிகளின் தாயார் நேற்று மாலை தொலைபேசி மூலம் அழைத்து அவர்களை வீட்டில் அகல் விளக்கு ஏற்றும்படி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அகல்விளக்கை மெத்தையருகே ஏற்றிய சிறுமிகள் கதவை பூட்டி விட்டு விளையாட சென்றுள்ளனர்.



பின்னர் விளக்கு தவறுதலாக மெத்தையில் பட்டு, வீடு முழுக்க தீ பரவியது.

இதையடுத்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தங்களது கடும் முயற்சியால் தீயானது வேற பகுதிகளுக்குப் பரவாமல் தடுத்தனர்.



 இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து ரத்தினபுரி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

Newsletter

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...