வங்கி கடன் பெற்று தருவதாக கூறி பல்வேறு மாவட்டங்களில் பண மோசடி செய்த பெண் கைது

நீலகிரி: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வங்கி கடன் பெற்று தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த பொள்ளாச்சியைச் சேர்ந்த பெண்மணியை நீலகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து உதகையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வங்கி கடன் பெற்று தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த பொள்ளாச்சியைச் சேர்ந்த பெண்மணியை நீலகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து உதகையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொள்ளாச்சியை சேர்ந்த ரூபினி பிரியா என்ற பெண்மணி பல்வேறு மாவட்டங்களில் மகளிர் குழுக்களிடம் இருந்தும், தனி நபர்களிடம் இருந்தும் வங்கி கடன் வாங்கித் தருவதாக கூறி பல கோடி ரூபாய் பெற்றுள்ளார். மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பணம் பெற்றுக் கொண்டவர்களிடம் எவ்வித தொகையும் தராமல் காலதாமதம் செய்து வந்துள்ளார்.

 

இதையடுத்து அவரிடம் பணம் கொடுத்த நீலகிரி மாவட்டம் எமரால்ட் பகுதியைச் சேர்ந்த குழந்தைவேலு என்பவர் குற்றவியல் பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

புகார் கொடுத்ததின் பேரில், பொள்ளாச்சியில் உள்ள ரூபினி பிரியாவை போலீசார் கைது செய்தனர். 



இதையடுத்து பணம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்கள் 30க்கும் மேற்பட்டோர் பணம் கேட்டு குற்றப்பிரிவு போலீசார் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.

அப்போது, பணம் கொடுத்து ஏமாற்றப்பட்ட பொதுமக்கள் கூறுகையில், மகளிர் குழுக்களிடம் 100 ரூபாய் வீதம் 18 லட்ச ரூபாயும் தனிநபர் கடனுக்காக நபருக்கு ஒரு லட்சத்திற்கும் மேலாகவும் வீட்டு கடன், வாகன கடன் போன்றவைகளை பெற்றுத் தருவதாக கூறி பல லட்சம் தொகையை பெற்றுக் கொண்டுள்ளார். கடந்த மூன்று வருடத்தில் இவரிடம் பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டவர்களில் கடந்த மாதம் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் பணத்தைப் பெற்றுக்கொண்ட ரூபினி பிரியா யாருக்கும் பதிலேதும் சொல்லாமல் அலைக்கழித்துள்ளதாக கூறினர்.

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....