கோவை: பொள்ளாச்சி: கோவையிலிருந்து பொள்ளாச்சி வந்த பேருந்தில் ரூ.80,000 பணத்தை தவறவிட்ட பயணியிடம் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஒப்படைத்த செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
கோவை: பொள்ளாச்சி: கோவையிலிருந்து பொள்ளாச்சி வந்த பேருந்தில் ரூ.80,000 பணத்தை தவறவிட்ட பயணியிடம் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஒப்படைத்த செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
கோவையிலிருந்து பொள்ளாச்சி வந்த பேருந்தில் கார்த்திகேயன் என்ற பயணி ரு80,000 அடங்கிய பை ஒன்றை தவறவிட்டார். அந்த பையை பேருந்து ஓட்டுநர் ஆனந்த் மற்றும் நடத்துநர் வீரமுத்து இருவரும் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர் அந்த பையில் இருந்த முகவரி உதவியுடன் பணத்தை தவற விட்ட நபரான பொள்ளாச்சி ஜோதி நகரைச் சேர்ந்த கார்த்திகேயனை தொடர்பு கொண்டு போலீசார் பணத்தை ஒப்படைத்தனர். நேர்மையுடன் நடந்து கொண்ட பேருந்து ஓட்டுநர் ஆனந்த் மற்றும் நடத்துநர் வீரமுத்து இருவரையும் அழைத்து மேலாண் இயக்குநர், பொதுமக்கள் மற்றும் போலீசார் பாராட்டினர்.
கோவையிலிருந்து பொள்ளாச்சி வந்த பேருந்தில் கார்த்திகேயன் என்ற பயணி ரு80,000 அடங்கிய பை ஒன்றை தவறவிட்டார். அந்த பையை பேருந்து ஓட்டுநர் ஆனந்த் மற்றும் நடத்துநர் வீரமுத்து இருவரும் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர் அந்த பையில் இருந்த முகவரி உதவியுடன் பணத்தை தவற விட்ட நபரான பொள்ளாச்சி ஜோதி நகரைச் சேர்ந்த கார்த்திகேயனை தொடர்பு கொண்டு போலீசார் பணத்தை ஒப்படைத்தனர். நேர்மையுடன் நடந்து கொண்ட பேருந்து ஓட்டுநர் ஆனந்த் மற்றும் நடத்துநர் வீரமுத்து இருவரையும் அழைத்து மேலாண் இயக்குநர், பொதுமக்கள் மற்றும் போலீசார் பாராட்டினர்.