கோவை: அரசு போக்குவரத்துகழக கோவை கோட்டம் சார்பில் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலம் ரூ.28.94 லட்சம் வருவாய் ஈட்டியுள்ளது என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை: அரசு போக்குவரத்துகழக கோவை கோட்டம் சார்பில் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலம் ரூ.28.94 லட்சம் வருவாய் ஈட்டியுள்ளது என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 10ம் தேதி திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா நடைபெற்றது. இதற்காக அரசு போக்குவரத்துகழகம் கோவை கோட்டம் சார்பில் கடந்த 9 முதல் வரும் 12ம் தேதி வரை 125 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய 4 மண்டலங்களில் இருந்து 78 ஆயிரத்து 629 கிலோ மீட்டர் இயக்கப்பட்டதில் 4 நாட்களில் 28 லட்சத்து 94 ஆயிரத்து 803 ரூபாய் வசூலானது.
இது கடந்த ஆண்டு இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளின் வசூலைவிட ரூ. 6 லட்சத்து 6 ஆயிரத்து 388 அதிக வருவாய் ஈட்டியுள்ளது.
கடந்த 10ம் தேதி திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா நடைபெற்றது. இதற்காக அரசு போக்குவரத்துகழகம் கோவை கோட்டம் சார்பில் கடந்த 9 முதல் வரும் 12ம் தேதி வரை 125 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய 4 மண்டலங்களில் இருந்து 78 ஆயிரத்து 629 கிலோ மீட்டர் இயக்கப்பட்டதில் 4 நாட்களில் 28 லட்சத்து 94 ஆயிரத்து 803 ரூபாய் வசூலானது.
இது கடந்த ஆண்டு இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளின் வசூலைவிட ரூ. 6 லட்சத்து 6 ஆயிரத்து 388 அதிக வருவாய் ஈட்டியுள்ளது.