ஆனைமலை புலிகள் காப்பக பயிற்சி மையத்தில் குளிர்கால வன விலங்குகள் கணக்கெடுப்பு நாளை துவக்கம்

கோவை: கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள பொள்ளாச்சி, டாப்சிலிப், மானாம்பள்ளி, வால்பாறை ஆகிய 4 வனச்சரகங்களில் இந்த ஆண்டு குளிர்கால வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நாளை துவங்குகிறது.


கோவை: கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள பொள்ளாச்சி, டாப்சிலிப், மானாம்பள்ளி, வால்பாறை ஆகிய 4 வனச்சரகங்களில் இந்த ஆண்டு குளிர்கால வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நாளை துவங்குகிறது.



இதனை முன்னிட்டு கணக்கெடுப்பில் ஈடுபடும் வன ஊழியர்கள். தன்னார்வலர்களுக்கு வால்பாறை அட்டகட்டியிலுள்ள ஆனைமலை புலிகள் காப்பக பயிற்சி மையத்தில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் விலங்குகளை எப்படி கணக்கெடுப்பது, எப்படி, எவ்வாறு கையாள்வது, வன விலங்குகளான புலிகள் சிறுத்தைகள் உள்ளிட்ட அனைத்து விலங்குகளை நேரில் பார்த்து குறிப்பெடுப்பது மரங்களில் நகக்கீறல்கள், எச்சங்கள் இவற்றை வைத்து அளவீடு செய்யும் பணிகள் நடைபெறுகிறது.

இந்த கணக்கெடுக்கும் பணியில் 64 குழுக்கள் ஈடுபடுகின்றனர். இதில் வனத்துறை ஊழியர்கள் தன்னார்வலர்கள் என மொத்தம் 230 பேர் கலந்து கொள்கின்றனர். இந்த பயிற்சியில் மாவட்ட வன அலுவலர் மாரிமுத்து, உதவி தலைமை வன பாதுகாவலர் செல்வம், தனி உதவியாளர் முரளீதரன், வனச்சரகர்கள், வனவர்கள், மற்றும் அலுவலர்கள் வேட்டைத்தடுப்பு காவலர்கள் தன்னார்வலர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கணக்கெடுப்பிற்குத் தேவையான உபகரணங்கள் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...