காரமடை அருகே கார் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்

கோவை:கோவை மேட்டுப்பாளையம் அருகே காரமடை மேம்பாலத்தில் கார் மீது தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

கோவை:கோவை மேட்டுப்பாளையம் அருகே காரமடை மேம்பாலத்தில் கார் மீது தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

மேட்டுப்பாளையம் சேரன் நகர் பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ராஜேஷ், ஹேமலதா, ரேஷ்மா, சசிகுமார் உள்ளிட்ட நான்கு பேர் இன்று மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு ஆம்னி காரில் புறப்பட்டுச் சென்றனர்.



இந்நிலையில், கார் கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் காரமடை மேம்பாலத்தில் சென்ற போது, கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி அதிவேகமாக வந்த ராஜம் என்ற தனியார் பேருந்து ஆம்னி காரின் மீது பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது.



இதில் காரை ஓட்டி வந்த ஓட்டுநர் ராஜேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இ மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து காரமடை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பேருந்து அப்பகுதியில் தொடர்ச்சியாக அதிவேகமாக சென்று விபத்து ஏற்படுத்தி பொதுமக்களை அச்சுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...