சிங்காநல்லூரில் பழுதடைந்த ஹவுசிங் யூனிட்; புதிய வீடுகள் கட்டித்தர வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் 500க்கும் மேற்பட்டோர் கைது

கோவை: சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே பழுதடைந்த மோசமான ஹவுசிங் யூனிட் வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகளை கட்டிக்கொடுக்க வலியுறுத்தி திமுக சார்பில் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே பழுதடைந்த மோசமான ஹவுசிங் யூனிட் வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகளை கட்டிக்கொடுக்க வலியுறுத்தி திமுக சார்பில் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே ஹவுசிங் யூனிட் குடியிருப்பு உள்ளது. இங்கு 17.55 ஏக்கர் பரப்பளவில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் 960 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பு 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நிலையில் தற்போது மிகவும் பழுதடைந்து, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

அங்கு குடியிருப்பவர்களுக்கு புதிய வீடுகள் கட்டி தரக்கோரி தொடர் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதன் ஒரு பகுதியாக, ஹவுசிங் யூனிட் அருகே திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிங்காநல்லூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் நா.கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய சிங்காநல்லூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் நா.கார்த்திக், குடியிருப்பவர்களுக்கு அதே பகுதியில் வீடுகள் கட்டி தர வேண்டுமென சட்ட மன்றத்தில் பல முறை வலியுறுத்தியும், அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என கார்த்திக் குற்றம்சாட்டினார். மேலும், குடியிருப்பு வாசிகளுக்கு மாற்று இடங்களில் தற்காலிக வீடுகள் ஒதுக்கித் தர வேண்டுமெனவும், சேதமடைந்த வீடுகளை இடித்து விட்டு புதிய வீடுகள் கட்டி தர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....