கோவை: சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே பழுதடைந்த மோசமான ஹவுசிங் யூனிட் வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகளை கட்டிக்கொடுக்க வலியுறுத்தி திமுக சார்பில் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே பழுதடைந்த மோசமான ஹவுசிங் யூனிட் வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகளை கட்டிக்கொடுக்க வலியுறுத்தி திமுக சார்பில் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே ஹவுசிங் யூனிட் குடியிருப்பு உள்ளது. இங்கு 17.55 ஏக்கர் பரப்பளவில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் 960 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பு 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நிலையில் தற்போது மிகவும் பழுதடைந்து, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
அங்கு குடியிருப்பவர்களுக்கு புதிய வீடுகள் கட்டி தரக்கோரி தொடர் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதன் ஒரு பகுதியாக, ஹவுசிங் யூனிட் அருகே திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிங்காநல்லூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் நா.கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய சிங்காநல்லூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் நா.கார்த்திக், குடியிருப்பவர்களுக்கு அதே பகுதியில் வீடுகள் கட்டி தர வேண்டுமென சட்ட மன்றத்தில் பல முறை வலியுறுத்தியும், அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என கார்த்திக் குற்றம்சாட்டினார். மேலும், குடியிருப்பு வாசிகளுக்கு மாற்று இடங்களில் தற்காலிக வீடுகள் ஒதுக்கித் தர வேண்டுமெனவும், சேதமடைந்த வீடுகளை இடித்து விட்டு புதிய வீடுகள் கட்டி தர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.