நீலகிரி: கோத்தகிரி - மேட்டுப்பாளையம் மாநில நெடுஞ்சாலையில் சுற்றித்திரியும் ஒற்றை காட்டுயானை அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது. வாகன ஓட்டுனர்கள் கவனமுடன் செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
நீலகிரி: கோத்தகிரி - மேட்டுப்பாளையம் மாநில நெடுஞ்சாலையில் சுற்றித்திரியும் ஒற்றை காட்டுயானை அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது. வாகன ஓட்டுனர்கள் கவனமுடன் செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அண்மைக்காலமாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக கோத்தகிரி மேட்டுப்பாளையம் மாநில நெடுஞ்சாலையில் சிலநாட்களாக ஒற்றை காட்டு யானை ஒன்று இரவு நேரங்களில் சாலையில் முகாமிட்டு போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த நிலையில், குஞ்சப்பனை நெடுஞ்சாலையில், சாலையை கடந்து வனப்பகுதிக்குள் செல்ல வழியில்லாததால் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சாலையில் நடந்து சென்றது.

அப்போது, எதிர்பாராதவிதமாக மேட்டுப்பாளையத்திலிருந்து கோத்தகிரி நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள், யானையை கண்டதும் நிலை தடுமாறி சாலையில் விழுந்தனர். யானை இவர்களை தாக்கும் என்ற சூழ்நிலையில், பின்னே வந்த லாரி ஓட்டுனர் இருசக்கர வாகனம் அருகே நிறுத்தி இளைஞர்களை காப்பாற்றினார்.
பின்னர் அப்பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானை, யாருக்கும் எவ்வித இடையூறுமின்றி சாலையில் இருந்து வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் அப்பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அண்மைக்காலமாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக கோத்தகிரி மேட்டுப்பாளையம் மாநில நெடுஞ்சாலையில் சிலநாட்களாக ஒற்றை காட்டு யானை ஒன்று இரவு நேரங்களில் சாலையில் முகாமிட்டு போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த நிலையில், குஞ்சப்பனை நெடுஞ்சாலையில், சாலையை கடந்து வனப்பகுதிக்குள் செல்ல வழியில்லாததால் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சாலையில் நடந்து சென்றது.

அப்போது, எதிர்பாராதவிதமாக மேட்டுப்பாளையத்திலிருந்து கோத்தகிரி நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள், யானையை கண்டதும் நிலை தடுமாறி சாலையில் விழுந்தனர். யானை இவர்களை தாக்கும் என்ற சூழ்நிலையில், பின்னே வந்த லாரி ஓட்டுனர் இருசக்கர வாகனம் அருகே நிறுத்தி இளைஞர்களை காப்பாற்றினார்.
பின்னர் அப்பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானை, யாருக்கும் எவ்வித இடையூறுமின்றி சாலையில் இருந்து வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் அப்பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.