வறட்சியின் பிடியில் வால்பாறை; தேயிலை செடிகளுக்கு மருந்தடிக்கும் பணி தீவிரம்

கோவை: வால்பாறையில் வெயில் மற்றும் பனிப்பொழிவு காரணமாக தேயிலை செடிகள் கருகி வரும் நிலையில் தேயிலை செடிகளுக்கு மருந்தடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை: வால்பாறையில் வெயில் மற்றும் பனிப்பொழிவு காரணமாக தேயிலை செடிகள் கருகி வரும் நிலையில் தேயிலை செடிகளுக்கு மருந்தடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.



கோவை மாவட்டம் வால்பாறையில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் தேயிலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது, வால்பாறையில் கடும் வறட்சி நிலவி வருவதால் பரம்பிகுளம், ஆழியாறு திட்டத்தின் மூலாதாரமாக விளங்கும் சின்னகல்லார் மற்றும் நீரார் அணைகளுக்கு வரும் ஊற்று நீரின் அளவு மிகவும் குறைந்துள்ளது. அதேபோல, கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு, நல்லகாத்து ஆறு உட்பட பல ஆறுகள் மற்றும் ஓடைகளில் நீர் வரத்து மிகவும் குறைந்து ஆறுகள் குட்டைகளாக மாறி விட்டது.



மேலும், வெயில் மற்றும் பனிப்பொழிவு காரணமாக தேயிலை செடிகள் கருகி வருகின்றன. இதனால் தேயிலை உற்பத்தி குறைந்துள்ளது. இதன் காரணமாக தேயிலை செடிகளைக் காக்கும் பொருட்டு, தேயிலை தோட்ட நிர்வாகம் தேயிலை செடிகளுக்கு மருந்தடிக்கும் பணியினை முடுக்கி விட்டுள்ளது. யூரியா மற்றும் எம்.ஓ.பி கலந்த கரைசலை நவீன இயந்திரம் மூலம் செடிகளின் மேல்பகுதியில் தெளித்து வருகிறது. 

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...