திருப்பூர்: திருப்பூரில் சுடுகாட்டை ஆக்கிரமித்து உரக்கிடங்கு பாதை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்: திருப்பூரில் சுடுகாட்டை ஆக்கிரமித்து உரக்கிடங்கு பாதை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் அணைப்பாளையம் கிராமத்தில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த சில வருடங்களாக அப்பகுதியில் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்காக அங்குள்ள சுடுகாட்டினை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாநகராட்சி சார்பில் உரக்கிடங்கு அமைப்பதற்காக அப்பகுதி பொதுமக்கள் சுடுகாட்டின் பாதி பகுதியை வழங்கியுள்ளனர் மீதி பகுதியை சுடுகாடாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில், மீதமுள்ள சுடுகாட்டு பகுதியில் உரக் கிடங்கிற்கு வழிப்பாதை அமைப்பதற்காக ஆக்கிரமிப்பு செய்துள்ளதை அறிந்த அப்பகுதி மக்கள், அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, உரக்கிடங்கு ஒரு பாதையை மட்டும் ஏற்படுத்தி கொள்வதாக உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
திருப்பூர் அணைப்பாளையம் கிராமத்தில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த சில வருடங்களாக அப்பகுதியில் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்காக அங்குள்ள சுடுகாட்டினை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாநகராட்சி சார்பில் உரக்கிடங்கு அமைப்பதற்காக அப்பகுதி பொதுமக்கள் சுடுகாட்டின் பாதி பகுதியை வழங்கியுள்ளனர் மீதி பகுதியை சுடுகாடாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில், மீதமுள்ள சுடுகாட்டு பகுதியில் உரக் கிடங்கிற்கு வழிப்பாதை அமைப்பதற்காக ஆக்கிரமிப்பு செய்துள்ளதை அறிந்த அப்பகுதி மக்கள், அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, உரக்கிடங்கு ஒரு பாதையை மட்டும் ஏற்படுத்தி கொள்வதாக உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.