கோவை: சிங்காநல்லூர் அருகே சாலையில் நடந்து சென்ற முதியவர் மீது லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: சிங்காநல்லூர் அருகே சாலையில் நடந்து சென்ற முதியவர் மீது லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(74). இவர் திருச்சி சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வருகிறார். இவர் வழக்கமாக சாந்தி கியர்சில் மதிய உணவு உண்ட பிறகு மீண்டும் பணிக்கு திரும்புவது வழக்கம்.
இந்நிலையில், இவர் இன்று வழக்கம் போல உணவருந்திவிட்டு, விஜிஎம் மருத்துவமனை அருகே பேருந்தை விட்டு இறங்கி மீண்டும் தான் பணிபுரியும் பெட்ரோல் பங்கிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, கள்ளிமடை பகுதியிலிருந்து வெளியே வந்த சிமெண்ட் கலவை லாரி திருச்சி சாலை நோக்கி செல்லும்போது, எதிர்பாராத விதமாக நடந்து சென்று கொண்டிருந்த முதியவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த காந்திபுரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து, முதியவரின் சடலம் உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(74). இவர் திருச்சி சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வருகிறார். இவர் வழக்கமாக சாந்தி கியர்சில் மதிய உணவு உண்ட பிறகு மீண்டும் பணிக்கு திரும்புவது வழக்கம்.
இந்நிலையில், இவர் இன்று வழக்கம் போல உணவருந்திவிட்டு, விஜிஎம் மருத்துவமனை அருகே பேருந்தை விட்டு இறங்கி மீண்டும் தான் பணிபுரியும் பெட்ரோல் பங்கிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, கள்ளிமடை பகுதியிலிருந்து வெளியே வந்த சிமெண்ட் கலவை லாரி திருச்சி சாலை நோக்கி செல்லும்போது, எதிர்பாராத விதமாக நடந்து சென்று கொண்டிருந்த முதியவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த காந்திபுரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து, முதியவரின் சடலம் உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.