ஆமை வேகத்தில் சாலை சீரமைப்பு பணி; ஆம்புலன்ஸ் செல்ல வழி இல்லாமல் நோயாளிகளை தூக்கிச் செல்லும் அவலம்

கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள அவசர சிகிச்சை மருத்துவமனைக்கு செல்லும் சாலையில், சீரமைப்பு பணிகளுக்காக மண் கொட்டி வைத்திருப்பதால், சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை மருத்துவமனைக்குள் தூக்கிச் செல்லும் அவலம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள அவசர சிகிச்சை மருத்துவமனைக்கு செல்லும் சாலையில், சீரமைப்பு பணிகளுக்காக மண் கொட்டி வைத்திருப்பதால், சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை மருத்துவமனைக்குள் தூக்கிச் செல்லும் அவலம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கோவை ஆர்எஸ் புரம் சம்பந்தம் கிழக்கு சாலை பகுதியில் அமைந்துள்ளது ஆர்.எஸ் அவசர சிகிச்சை பிரிவு மருத்துவமனை. இந்த மருத்துவமனைக்கு தினமும் 50க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.



இந்த பகுதியில் சாலை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றது வருவதால் ஆம்புலன்ஸ்களை மருத்துவமனை வரை கொண்டு வருவது சிக்கலாக உள்ளது. 



மேலும், இந்த மருத்துவமனை வரும் வழியில் புதிய சாலை அமைப்பதற்காக ஜல்லி மண்ணை சாலையின் குறுக்கே கொட்டி சென்றுள்ளனர்.



இந்த நிலையில், அவசர சிகிச்சைக்காக அழைத்து வரும் நோயாளிகளை, நோயாளிகளின் உறவினர்கள் தூக்கிச்சென்றபடி மருத்துவமனை வரை கொண்டு செல்லும் அவலமும் அரங்கேறி வருகிறது. 



அதேபோல, ஒரு சில நோயாளிகள் தூக்கக் கூடிய நிலையில் இல்லாததால் அவர்களை ஸ்ரெட்சர் மூலமாகவும் சாலையில் அழைத்துச் செல்கின்றனர். மேலும், இந்த சாலையை ஆம்புலன்ஸ் வரும் அளவிற்கு வழி ஏற்படுத்தித் தரவேண்டும் எனவும் இல்லையெனில் விரைவாக பணியை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகளின் உறவினர்கள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

வளர்ச்சிப் பணி என்பது நல்ல பணியாக இருந்தாலும் நோயாளிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடைஞ்சல் ஏற்படுத்தாமல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...