கோவை: மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் செல்பி எடுக்க முயற்சித்த இளைஞர் ஆற்றில் தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் செல்பி எடுக்க முயற்சித்த இளைஞர் ஆற்றில் தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கோவலூரைச் சேர்ந்தவர் இளங்கோ(33). இவர் இன்று காலை தனது நண்பர்கள் இருவருடன் மேட்டுப்பாளையம் பத்திரகாளியம்மன் கோவில் பகுதிக்கு வந்துள்ளார். அங்கு மது அருந்திய பின்பு, இருசக்கர வாகனத்தின் மூலம் நெல்லித்துரை பாலத்திற்கு வந்துள்ளனர். அப்போது, இளங்கோ மட்டும் பாலத்தின் தடுப்பு சுவர் மீது நின்று பவானி ஆற்றினை செல்பி எடுக்க முயன்றுள்ளார்.
அப்போது, கால் தடுமாறி பவானி ஆற்றில் தலைகுப்புற விழுந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது சக நண்பர்கள் மற்றும் அருகில் இருப்பவர்கள் பார்த்து, மேட்டுப்பாளையம் காவல்துறையினருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் அளித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், பவானி ஆற்றில் இறங்கி பரிசல் உதவியுடன் தவறி விழுந்த இளங்கோவை தேடினர். இரண்டு மணி நேரமாக தேடியும் உடல் இதுவரை கிடைக்காத நிலையில், தொடர்ந்து உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது. செல்பி மோகத்தால் பவானி ஆற்றில் தவறி விழுந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கோவலூரைச் சேர்ந்தவர் இளங்கோ(33). இவர் இன்று காலை தனது நண்பர்கள் இருவருடன் மேட்டுப்பாளையம் பத்திரகாளியம்மன் கோவில் பகுதிக்கு வந்துள்ளார். அங்கு மது அருந்திய பின்பு, இருசக்கர வாகனத்தின் மூலம் நெல்லித்துரை பாலத்திற்கு வந்துள்ளனர். அப்போது, இளங்கோ மட்டும் பாலத்தின் தடுப்பு சுவர் மீது நின்று பவானி ஆற்றினை செல்பி எடுக்க முயன்றுள்ளார்.
அப்போது, கால் தடுமாறி பவானி ஆற்றில் தலைகுப்புற விழுந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது சக நண்பர்கள் மற்றும் அருகில் இருப்பவர்கள் பார்த்து, மேட்டுப்பாளையம் காவல்துறையினருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் அளித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், பவானி ஆற்றில் இறங்கி பரிசல் உதவியுடன் தவறி விழுந்த இளங்கோவை தேடினர். இரண்டு மணி நேரமாக தேடியும் உடல் இதுவரை கிடைக்காத நிலையில், தொடர்ந்து உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது. செல்பி மோகத்தால் பவானி ஆற்றில் தவறி விழுந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.