திருப்பூர்: வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் திருப்பூர் சந்தைகளில் வெங்காயம் பதுக்கலை தவிர்க்க, உணவு வழங்கல் அலுவலர் தலைமையில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் திருப்பூர் சந்தைகளில் வெங்காயம் பதுக்கலை தவிர்க்க, உணவு வழங்கல் அலுவலர் தலைமையில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், மாவட்டம் தோறும் சந்தைகளில் வெங்காயம் பதுக்கப்படுகிறதா என அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் தென்னம்பாளையும் சந்தையில் வெங்காயம் மண்டிகளில் இன்று உணவு வழங்கல் அலுவலர் தலைமையில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, வெங்காயம் மண்டி உரிமையாளர்கள் எத்தனை டன் வெங்காயம் இருப்பு வைத்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டது. கர்நாடகாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் தற்போது கிலோ 100 முதல் 140 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் அதேபோல், எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் கிலோ 35 முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக வெங்காய மண்டி உரிமையாளர்கள் தெரிவித்தனர். தற்போது எகிப்தில் இருந்து சுமார் 10 டன் அளவுவரை வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.