மேட்டுப்பாளையத்தில் கார் - லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு; 2 பேர் படுகாயம்

கோவை: மேட்டுப்பாளையம் அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: மேட்டுப்பாளையம் அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உதகை காந்தல் பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவ் குமார். இவருடன் மகாலட்சுமி, தாமோதரன் என மூவரும் யுனோவா காரில் நேற்று திருநெல்வேலியில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு இன்று அதிகாலை வீடு திரும்பி கொண்டு இருந்தனர். இந்நிலையில், மேட்டுப்பாளையம் அன்னூர் சாலை வழியே உதகைக்கு திரும்பி வந்துகொண்டிருந்த போது, குமரன் குன்று அருகே வந்த போது எதிரே வந்த சரக்கு லாரி மீது கார் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த சஞ்சீவ் குமார் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். மேலும், பின் பக்கத்தில் அமர்ந்து வந்த மகாலட்சுமி மற்றும் தாமோதரன் படுகாயமடைந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற சிறுமுகை காவல்துறையினர், காயமடைந்த இருவரையும் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...