கோவை அரசு மருத்துவமனையின் முன்னாள் இருப்பிட மருத்துவ அலுவலர் சௌந்தர்வேலுக்கு பத்திரிக்கையாளர்கள் சார்பில் பாராட்டு விழா

கோவை: கோவை அரசு மருத்துவமனையின் முன்னாள் இருப்பிட மருத்துவ அலுவலர் சௌந்தர்வேலுக்கு கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் அனைத்து பத்திரிக்கையாளர்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

கோவை: கோவை அரசு மருத்துவமனையின் முன்னாள் இருப்பிட மருத்துவ அலுவலர் சௌந்தர்வேலுக்கு கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் அனைத்து பத்திரிக்கையாளர்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

கோவை அரசு மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ அலுவலராக பணிபுரிந்து வந்த டாக்டர் சௌந்தர்வேல் கடந்த நவம்பர் 30ம் தேதி பணி ஓய்வு பெற்றார். நடுத்தர குடும்பத்தில் பிறந்த அவர் மதுரை அரசு மருத்துவக் கல்லூரில் 1990-ம் ஆண்டு பொது மருத்துவத்தில் முதுநிலை பட்டம் பெற்று 1991-ம் ஆண்டு அரசு மருத்துவப் பணியில் சேர்ந்தவர், ஒத்தக்கால்மண்டபத்தை அடுத்த, அரிசிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 12 ஆண்டுகள் மருத்துவராக பணியாற்றினார்.

அங்கு ‘சின்ன டாக்டர்’ என்று அன்போடு அழைக்கும் அளவுக்கு மக்களுடன் நெருங்கிப் பழகினார். பின்னர், 2002-ம் ஆண்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உதவி பேராசிரியராக பணியில் சேர்ந்தார். 2005 முதல் 2008-ம் ஆண்டு வரை உதவி இருப்பிட மருத்துவ அலுவலராக பணியாற்றி அவர், 2015-ம் ஆண்டு இருப்பிட மருத்துவ அலுவலராக பதவி உயர்வு பெற்று பணியாற்றி வந்தார்.

மேலும், அவர் தனது பணி காலத்தில் பல்வேறு ஏழை எளிய மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்து கொடுத்துள்ளார். அதேபோல பலதரப்பட்ட இயக்கங்கள், கட்சிகள், பத்திரிகையாளர்கள் , சமூக ஆர்வலர்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள் ஆகியோருக்கு தேவையான பல்வேறு மருத்துவம் சார்ந்த உதவிகளை செய்து கொடுத்துள்ளார்.



இந்த நிலையில், மருத்துவத்துறையில் பல ஆண்டுகளாக பல்வேறு சேவைகள் புரிந்து பொதுமக்களுக்காக பணியாற்றிய மருத்துவர் சௌந்தர்வேலுக்கு பாராட்டு தெரிவித்து கௌரவப்படுத்தும் வகையில் கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில், அனைத்து பத்திரிக்கையாளர்களும் அவரை வாழ்த்தி நினைவுப்பரிசு வழங்கினர். 



இந்த நிகழ்வில் மூத்த பத்திரிக்கையாளர்கள், இளம் பத்திரிகையாளர் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...