கோவை: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவினை திரும்ப பெறக்கோரி கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற எஸ்டிபிஐ கட்சியினர் 36 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவினை திரும்ப பெறக்கோரி கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற எஸ்டிபிஐ கட்சியினர் 36 பேரை போலீசார் கைது செய்தனர்.
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ள நிலையில், அம்மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அண்டை நாடுகளில் இருந்து குடிபெயரும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், அம்மசோதாவினை திரும்ப பெறக்கோரி கோவை ரயில் நிலையத்தை எஸ்டிபிஐ கட்சியினர் முற்றுகையிட முயன்றனர். சிறுபான்மையின மக்களை வஞ்சிக்கும் வகையில் பல்வேறு சட்டங்களை பாஜக செயல்படுத்தி வருவதாகவும் மாநில சுயாட்சிக்கு எதிரான திட்டமாக இந்த மசோதா இருப்பதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
மேலும், இந்த மசோதாவினை திரும்ப பெற வேண்டும் எனவும் இல்லையெனில் நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடைபெறும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 36 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ள நிலையில், அம்மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அண்டை நாடுகளில் இருந்து குடிபெயரும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், அம்மசோதாவினை திரும்ப பெறக்கோரி கோவை ரயில் நிலையத்தை எஸ்டிபிஐ கட்சியினர் முற்றுகையிட முயன்றனர். சிறுபான்மையின மக்களை வஞ்சிக்கும் வகையில் பல்வேறு சட்டங்களை பாஜக செயல்படுத்தி வருவதாகவும் மாநில சுயாட்சிக்கு எதிரான திட்டமாக இந்த மசோதா இருப்பதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
மேலும், இந்த மசோதாவினை திரும்ப பெற வேண்டும் எனவும் இல்லையெனில் நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடைபெறும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 36 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.