கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மழை காரணமாக வீடுகள் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மழை காரணமாக வீடுகள் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு முதல் கனமழை பெய்து வரும் நிலையில், ஏ.டி.காலனி பகுதியில் உள்ள ஒரு மாடி வீட்டின் சுற்றுசுவர் இடிந்து மற்ற நான்கு வீடுகளில் மீது விழுந்ததில் வீட்டில் உரங்கி கொண்டிருந்தவர் மீது விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர்.
ஏ.டி காலனி பகுதியில் உள்ள அருக்கானி, சின்னம்மாள், உள்ளிட்ட நான்கு பேர் வீடுகள் அடுத்தடுத்து உள்ளது. இந்த குடியிருப்பு அருகே மாடி வீடு ஒன்று இருந்துள்ளது. அதற்கு அருகே அந்த வீட்டின் சுற்று சுவர் 10 அடிக்கும் கட்டபட்டிருந்த நிலையில் நேற்று இரவு பெய்த கன மழைக்கு அந்த சுற்று சுவர் இடிந்து இந்த நான்கு வீடுகளின் மீது விழுந்தது.

அப்போது, வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்கள் குழந்தைகள் உட்பட 17 பேர் உடல் நசுங்கி மண் மூடியும் உயிரிழந்தனர்.

இதனையடுத்து மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து ஜே.சி.பி உதவியுடன் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் விபத்துக்கு காரணமான வீட்டின் உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.