திருப்பூரில் சிஐடி போலீசார் என கூறி ரூ.3 லட்சம் மோசடி; 6 பேர் கொண்ட கும்பலில் மூவர் கைது

திருப்பூர்: திருப்பூரில் சிஐடி போலீசார் என கூறி மளிகை கடை உரிமையாளரிடம் ரூ.3 லட்சம் பணத்தை ஆறு பேர் கொண்ட கும்பல் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்: திருப்பூரில் சிஐடி போலீசார் என கூறி மளிகை கடை உரிமையாளரிடம் ரூ.3 லட்சம் பணத்தை ஆறு பேர் கொண்ட கும்பல் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் வேலம்பாளையம் சாஸ்திரி நகர் பகுதியை சேர்ந்தவர் ரூடா ராம் செளத்ரி. இவர் திருப்பூர் ஓடக்காடு பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 25ம் தேதி இவரது கடைக்கு வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் ஒன்று, தாங்கள் சிஐடி போலீஸ் எனவும், மளிகை கடையில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்று வருவதாகவும், ஆதலால் ரூடா ராம் செளத்ரி மீது வழக்கு பதிய போவதாகவும் கூறியுள்ளனர்.

மேலும், வழக்கு போடாமல் இருப்பதற்கு ரூ 5 லட்சம் பணம் தர வேண்டும் என கேட்டுள்ளனர். பயந்து போன ரூடா ராம் செளத்ரி மூன்றரை லட்சம் தருவதாக ஒப்புக் கொண்டு மூன்று லட்சத்தை அங்கேயே தந்துள்ளார். மேலும் ஐம்பதாயிரம் பணத்தை பின்பு தருவதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து, ஆறு பேர் கொண்ட கும்பல் தொடர்ச்சியாக போனில் தொடர்பு கொண்டு பணத்தை கேட்டதில் சந்தேகமடைந்த ரூடா ராம் செளத்ரி அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் அனுப்பர்பாளையம் புதூர் பகுதியில் ஆறு பேர் கொண்ட கும்பலை சேர்ந்த ஒருவர் பணம் பெற வந்த பொழுது, மறைந்திருந்த போலீசார், அவரை கையும் களவுமாக பிடித்து காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.



விசாரணையில் அவர் பெயர் சாதிக் அலி(44) என்பதும் மற்றவர்கள் திருப்பூரைச் சேர்ந்த சையது இப்ராகிம்(47), முகமது ஹனீபா(42), என்பது தெரியவந்தது. 



தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ஐம்பதாயிரம் பணம் மற்றும் இரண்டு இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பாபு, ரகமத்துல்லா, அஸ்ரப் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...