கோவை: தமிழக அரசியல் வெற்றிடத்தை ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி நிரப்பி இருக்கின்றனர் எனவும் தமிழகத்தில் அடுத்த 20 ஆண்டுகளுக்கு திராவிட கட்சிகள்தான் ஆட்சி செய்யும் என மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி தெரிவித்தார்.
கோவை: தமிழக அரசியல் வெற்றிடத்தை ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி நிரப்பி இருக்கின்றனர் எனவும் தமிழகத்தில் அடுத்த 20 ஆண்டுகளுக்கு திராவிட கட்சிகள்தான் ஆட்சி செய்யும் என மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி தெரிவித்தார்.
கோவையில் மனித நேய ஜனநாயக கட்சியின் சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி கலந்து கொண்டார்.

அப்போது, செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், காவல் துறையில் தமிழ்மொழியில் தகவல் தொடர்புகள் இருக்கும் என்ற டி.ஜி.பி திரிபாதியின் உத்தரவு வரவேற்கத்தக்கது எனவும் மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில தினங்களாக நடந்த அரசியல் சூழல் ஜனநாயகத்திற்கு மிக பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியது எனவும் தற்போது நல்ல சூழல் திரும்பி இருக்கின்றது எனவும் தெரிவித்தார். அங்கு நடைபெற்ற பெருந்தவறுக்கு துணை போன அம்மாநில ஆளுநர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த மாநில ஆளுநரை உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
மத்திய அரசு ஆளுநர்களை கொண்டு இரட்டை நிர்வாகத்தை மேற்கொள்ள முயற்சிக்க கூடாது என்றும் புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி செய்வதைப் போல மராட்டியத்தில் ஆளுநர் செய்கின்றார் எனவும் இது ஜனநாயக படுகொலை எனவும் தெரிவித்த அவர், உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை மேயர், நகராட்சி தலைவர்கள் போன்ற பொறுப்புகளை நேரடியாக தேர்வு செய்வதுதான் சரியாக இருக்கும் என்றார்.
கோடம்பாக்கத்தில் உறங்கிக் கொண்டு இருந்த சிலரை தூண்டிவிட்டு, தமிழகத்தில் வெற்றிடம் இருப்பதாக வடமாநிலத்தை சேர்ந்த சக்திகள் சொல்ல வைப்பதாகவும், கோடம்பாக்கத்தில் இருந்து அரசியல் அதிகாரத்திற்கு வர விரும்புவதில் தவறில்லை என்று கூறிய அவர், அரசியல் வெற்றிடத்தை ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் நிரப்பி இருக்கின்றனர் எனவும் தமிழகத்தில் அடுத்த 20 ஆண்டுகளுக்கு திராவிட கட்சிகள்தான் ஆட்சி செய்யும் என்று தெரிவித்தார்.
அற்புதம் நிகழும், அதிசயம் நிகழும் என்று சிலர் சொல்வதை மக்கள் ரசிக்கின்றனர் ஆனால், ஏற்றுக்கொள்ளவில்லை என கூறியவர், உள்ளாட்சி தேர்தல் நடைபெற வேண்டும் என்பது மனித நேய ஜனநாயக கட்சியின் நிலைப்பாடு என்று கூறினார்.
மேலும், துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியின் அதிமுக குறித்த விமர்சனங்கள் கவலையளிப்பதாகத் தெரிவித்த அவர், இதற்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் தான் பதில் அளிக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா இருந்திருந்தால் அதிமுக மீது இது போன்ற விமர்சனங்களை யாரும் வைத்திருக்க முடியாது என தெரிவித்தார்.
கோவையில் மனித நேய ஜனநாயக கட்சியின் சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி கலந்து கொண்டார்.

அப்போது, செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், காவல் துறையில் தமிழ்மொழியில் தகவல் தொடர்புகள் இருக்கும் என்ற டி.ஜி.பி திரிபாதியின் உத்தரவு வரவேற்கத்தக்கது எனவும் மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில தினங்களாக நடந்த அரசியல் சூழல் ஜனநாயகத்திற்கு மிக பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியது எனவும் தற்போது நல்ல சூழல் திரும்பி இருக்கின்றது எனவும் தெரிவித்தார். அங்கு நடைபெற்ற பெருந்தவறுக்கு துணை போன அம்மாநில ஆளுநர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த மாநில ஆளுநரை உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
மத்திய அரசு ஆளுநர்களை கொண்டு இரட்டை நிர்வாகத்தை மேற்கொள்ள முயற்சிக்க கூடாது என்றும் புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி செய்வதைப் போல மராட்டியத்தில் ஆளுநர் செய்கின்றார் எனவும் இது ஜனநாயக படுகொலை எனவும் தெரிவித்த அவர், உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை மேயர், நகராட்சி தலைவர்கள் போன்ற பொறுப்புகளை நேரடியாக தேர்வு செய்வதுதான் சரியாக இருக்கும் என்றார்.
கோடம்பாக்கத்தில் உறங்கிக் கொண்டு இருந்த சிலரை தூண்டிவிட்டு, தமிழகத்தில் வெற்றிடம் இருப்பதாக வடமாநிலத்தை சேர்ந்த சக்திகள் சொல்ல வைப்பதாகவும், கோடம்பாக்கத்தில் இருந்து அரசியல் அதிகாரத்திற்கு வர விரும்புவதில் தவறில்லை என்று கூறிய அவர், அரசியல் வெற்றிடத்தை ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் நிரப்பி இருக்கின்றனர் எனவும் தமிழகத்தில் அடுத்த 20 ஆண்டுகளுக்கு திராவிட கட்சிகள்தான் ஆட்சி செய்யும் என்று தெரிவித்தார்.
அற்புதம் நிகழும், அதிசயம் நிகழும் என்று சிலர் சொல்வதை மக்கள் ரசிக்கின்றனர் ஆனால், ஏற்றுக்கொள்ளவில்லை என கூறியவர், உள்ளாட்சி தேர்தல் நடைபெற வேண்டும் என்பது மனித நேய ஜனநாயக கட்சியின் நிலைப்பாடு என்று கூறினார்.
மேலும், துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியின் அதிமுக குறித்த விமர்சனங்கள் கவலையளிப்பதாகத் தெரிவித்த அவர், இதற்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் தான் பதில் அளிக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா இருந்திருந்தால் அதிமுக மீது இது போன்ற விமர்சனங்களை யாரும் வைத்திருக்க முடியாது என தெரிவித்தார்.