பிரபாகரனின் 65வது பிறந்தநாளை முன்னிட்டு வால்பாறையில் இரத்ததான முகாம்

கோவை: பிரபாகரனின் 65வது பிறந்தநாளை முன்னிட்டு வால்பாறையில் நாம் தமிழர் கட்சி சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது.

கோவை: பிரபாகரனின் 65வது பிறந்தநாளை முன்னிட்டு வால்பாறையில் நாம் தமிழர் கட்சி சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறையில் நாம் தமிழர் கட்சி சார்பில் வே பிரபாகரனின் 65வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வால்பாறை அண்ணா நகர் பகுதியில் கட்சியின் கொடியேற்றப்பட்டு உறுதி மொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, வால்பாறை நகைக் கடை வீதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் வள்ளுவர் குடில் என்ற பெயரில் மக்கள் சேவை அலுவலகம் துவக்கி வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதன் முக்கிய நிகழ்வான இரத்ததான முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. வால்பாறை அரசு மருத்துவமனை இரத்த பரிசோதனை மைய ஆலோசகர் செல்வம் மணி மற்றும் செவிலியர்கள் இரத்த பரிசோதனை மற்றும் சேகரிப்பில் ஈடுபட்டனர்.



இந்த முகாமில் 50க்கும் மேற்பட்டவர்கள் இரத்ததானம் வழங்கினர். இங்கு சேகரிக்கப்பட்ட இரத்தம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை இரத்த வங்கிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த முகாமில் நாம் தமிழர் கட்சி நகர செயலாளர் சண்முகம், மாவட்ட பொறுப்பாளர் அய்யப்பன், தமிழ்வாணன், லோகேஸ்வரன், பிரபாகரன் வெள்ளிங்கிரி உட்பட ஏராளமான நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...