உள்ளாட்சி தேர்தல் பணிக்கான கோவை மண்டல இரண்டாம் கட்ட ஆயத்த கூட்டம்

கோவை: உள்ளாட்சி தேர்தல் பணிக்கான கோவை மண்டல இரண்டாம் கட்ட ஆயத்த கூட்டம் தேர்தல் ஆணையர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.


கோவை: உள்ளாட்சி தேர்தல் பணிக்கான கோவை மண்டல இரண்டாம் கட்ட ஆயத்த கூட்டம் தேர்தல் ஆணையர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.



தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, தேர்தல் நடத்தும் அலுவலர்கள், ஆட்சியர்களுடன் தமிழக தேர்தல் ஆணையர் ஆய்வு கூட்டத்தை நடத்தி வருகிறார். 



தேர்தல் ஆணையர் தலைமையில் முதல் கட்ட ஆய்வு முடிவடைந்த நிலையில் கோவை மண்டலத்திற்கு உட்பட்ட கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து ஆட்சியர்கள், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்ட இரண்டாம் கட்ட ஆயத்த கூட்டம் தமிழக தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.

இதில், உள்ளாட்சி தேர்தல்கள் நடத்துவது தொடர்பாகவும், தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்துவது, பாதுகாப்பு பணிகள், வாக்குப் பதிவு மற்றும் எண்ணிக்கை தொடர்பாக, அரசு அதிகாரிகளுக்குப் பயிற்சி அளித்தல், வாக்கு பதிவு இயந்திரங்கள் சரிபார்த்தல், வாக்கு சாவடி மையங்கள் உள்ளிட்ட பணிகள் குறித்து இந்த ஆய்வுக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.



தமிழக தேர்தல் ஆணையர் பழனிச்சாமி பேசுகையில், கடந்த கால அனுபவங்கள் கொண்டு வரும் உள்ளாட்சி தேர்தலை சிறந்த முறையில் நடத்திட ஆயத்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

உள்ளாட்சி தேர்தல் கடும் சவாலான பணியாக இருக்கும் எனவும் இதில் பாரபட்சம் இல்லாமல் தேர்தல் நடைபெற அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றவர், தேர்தல் விதிமுறைகள் குறித்து வழங்கப்பட்ட கையேடுகளை தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் கொடுத்து இதன் விதிமுறைகள் படி நடந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...