திருப்பூர்: திருப்பூரில் கந்து வட்டி கேட்டு குடும்பத்தை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் அலுவலகம் முன்பு இன்று பனியன் நிறுவன தொழிலாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்: திருப்பூரில் கந்து வட்டி கேட்டு குடும்பத்தை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் அலுவலகம் முன்பு இன்று பனியன் நிறுவன தொழிலாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சந்தானம்( 51). இவர் பனியன் நிறுவனத்தில் இஸ்திரி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி செல்வி (45). இவர்கள் கடந்த 21 வருடமாக திருப்பூர் மங்கலம் ரோட்டில் உள்ள பூச்சிக்காடு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 5ம் தேதி 3700 ரூபாய் கந்து வட்டிக்கு தனது உறவினர் செல்வம் (48) என்பவரிடம் வாங்கி உள்ளார். அதன்படி, ஒவ்வொரு வாரமும் 400 ரூபாய் கட்டி வந்துள்ளார். இதுவரை 1,800 ரூபாய் வட்டி மட்டும் செலுத்தியுள்ளார். இந்நிலையில், வேலையின்மை காரணமாக கடந்த இரண்டு வாரமாக வட்டி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அடியாட்களை வைத்து செல்வம், கடந்த 19ம் தேதி வீடு புகுந்து சந்தானம் குடும்பத்தாரை தாக்கி உள்ளனர்.
இதையடுத்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சந்தானம் மற்றும் அவரது மனைவி, இதுகுறித்து மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், போலீசார் முறையான நடவடிக்கை எடுக்காததால் மன விரக்தி அடைந்த சந்தானம் இன்று காலை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் நுழைவு வாயில் முன்பாக பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அவரை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீட்டு மத்திய போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.
கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சந்தானம்( 51). இவர் பனியன் நிறுவனத்தில் இஸ்திரி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி செல்வி (45). இவர்கள் கடந்த 21 வருடமாக திருப்பூர் மங்கலம் ரோட்டில் உள்ள பூச்சிக்காடு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 5ம் தேதி 3700 ரூபாய் கந்து வட்டிக்கு தனது உறவினர் செல்வம் (48) என்பவரிடம் வாங்கி உள்ளார். அதன்படி, ஒவ்வொரு வாரமும் 400 ரூபாய் கட்டி வந்துள்ளார். இதுவரை 1,800 ரூபாய் வட்டி மட்டும் செலுத்தியுள்ளார். இந்நிலையில், வேலையின்மை காரணமாக கடந்த இரண்டு வாரமாக வட்டி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அடியாட்களை வைத்து செல்வம், கடந்த 19ம் தேதி வீடு புகுந்து சந்தானம் குடும்பத்தாரை தாக்கி உள்ளனர்.
இதையடுத்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சந்தானம் மற்றும் அவரது மனைவி, இதுகுறித்து மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், போலீசார் முறையான நடவடிக்கை எடுக்காததால் மன விரக்தி அடைந்த சந்தானம் இன்று காலை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் நுழைவு வாயில் முன்பாக பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அவரை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீட்டு மத்திய போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.