ஆளுநரை கைப்பாவையாக வைத்து கொண்டு கொல்லைப்புற வழியாக பாஜக மஹாராஸ்டிராவில் ஆட்சியமைத்துள்ளது - புதுச்சேரி முதல்வர் கோவையில் பேட்டி

கோவை: மஹாராஸ்டிரா மாநிலத்தில் மிகப்பெரிய ஜனநாயக படுகொலை நடந்துள்ளது என கோவை டிவிஎஸ் நகர் பகுதியில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.


கோவை: மஹாராஸ்டிரா மாநிலத்தில் மிகப்பெரிய ஜனநாயக படுகொலை நடந்துள்ளது என கோவை டிவிஎஸ் நகர் பகுதியில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அப்போது பேசிய அவர், ஆளுநரை கைப்பாவையாக வைத்து கொண்டு கொல்லைப்புற வழியாக பாஜக ஆட்சியமைத்துள்ளது எனவும், பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடாதது, ஆளுநர் பாரபட்சமாக செயல்படுகிறார் என்பதை காட்டுகிறது எனவும் குற்றம்சாட்டினார். 

மேலும், மஹாராஸ்டிராவில் சட்டமன்றத்தை கூட்டி பெரும்பான்மை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டுமென தெரிவித்த அவர், மாற்று கட்சி ஆட்சியுள்ள மாநிலங்களில் ஆட்சி கலைப்பு, குதிரைபேரம், எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவது உள்ளிட்ட ஜனநாயக விரோத செயல்பாடுகளில் பாஜக தொடர்ந்து ஈடுபடுகிறது என அவர் கூறினார். 

பண, அதிகார பலத்தை கொண்டு பாஜக, எதிர்கட்சிகளை ஒடுக்குகிறது எனவும், எதிர்கட்சிகளை பழிவாங்கும் பாஜகவின் நடவடிக்கை ஜனநாயகத்திற்கு நல்லதல்ல எனவும் அவர் தெரிவித்தார். மேலும், பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக, பிரதமரை சந்தித்து நீட் தேர்வில் விலக்கு கேட்க வேண்டும் எனவும், நீட் தேர்வில் விலக்களிக்க வேண்டுமென பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி நாடகமாட கூடாது எனவும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...