நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் 'கேன்சர் கில்லர்' எனப்படும், முள் சீத்தா பழ சீசன் முடியும் நிலையில் உள்ளதால் இதனை வாங்குவதில் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் 'கேன்சர் கில்லர்' எனப்படும், முள் சீத்தா பழ சீசன் முடியும் நிலையில் உள்ளதால் இதனை வாங்குவதில் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் மருத்துவ குணம் மிக்க பல்வேறு பழ வகைகள் விளைந்து வருகின்றன. அந்த வகையில் செப்டம்பர் மாதம் துவங்கி நவம்பர் மாதம் வரை விளையக்கூடிய கேன்சர் கில்லர் என்றழைக்கப்படும் முள் சீத்தா பழ விளைச்சல் இந்த மாதத்துடன் முடிவதால் இதனை வாங்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த பழங்கள் தற்போது வண்டிச்சோலை, பர்லியார், எல்லநள்ளி உள்ளிட்ட சில இடங்களில் மட்டுமே விளைவதால் இதற்கான கிராக்கி அதிகரித்து காணப்படுகிறது.

இந்த பழங்கள் குன்னூரை தவிர, கூடலுார் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் சில இடங்களில் மட்டும் விளைவிக்கப்படுகிறது. தற்போது, சீசன் முடியும் தருவாயில் உள்ளதால், குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட பல இடங்களிலும் விற்பனைக்கு உள்ளன. இதன் விலை கிலோவுக்கு, 400 முதல் 500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. மருத்துவ குணம் நிறைந்துள்ளதால், இதற்கு அதிகளவில் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சித்த மருத்துவர்கள் கூறுகையில், 'இந்த பழம் நிமோனியா, சிறுநீரக குழாய், குடல், தோல் நோய்களை குணப்படுத்தும். இந்த பழத்தின் இலைகள், பட்டை, வேர் போன்றவை, உடல்நலத்திற்கு நல்லது. எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தரும் இந்த முள் சீத்தாவை வளர்க்க, தோட்டக்கலைத் துறையினர், உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
நீலகிரி மாவட்டத்தில் மருத்துவ குணம் மிக்க பல்வேறு பழ வகைகள் விளைந்து வருகின்றன. அந்த வகையில் செப்டம்பர் மாதம் துவங்கி நவம்பர் மாதம் வரை விளையக்கூடிய கேன்சர் கில்லர் என்றழைக்கப்படும் முள் சீத்தா பழ விளைச்சல் இந்த மாதத்துடன் முடிவதால் இதனை வாங்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த பழங்கள் தற்போது வண்டிச்சோலை, பர்லியார், எல்லநள்ளி உள்ளிட்ட சில இடங்களில் மட்டுமே விளைவதால் இதற்கான கிராக்கி அதிகரித்து காணப்படுகிறது.

இந்த பழங்கள் குன்னூரை தவிர, கூடலுார் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் சில இடங்களில் மட்டும் விளைவிக்கப்படுகிறது. தற்போது, சீசன் முடியும் தருவாயில் உள்ளதால், குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட பல இடங்களிலும் விற்பனைக்கு உள்ளன. இதன் விலை கிலோவுக்கு, 400 முதல் 500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. மருத்துவ குணம் நிறைந்துள்ளதால், இதற்கு அதிகளவில் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சித்த மருத்துவர்கள் கூறுகையில், 'இந்த பழம் நிமோனியா, சிறுநீரக குழாய், குடல், தோல் நோய்களை குணப்படுத்தும். இந்த பழத்தின் இலைகள், பட்டை, வேர் போன்றவை, உடல்நலத்திற்கு நல்லது. எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தரும் இந்த முள் சீத்தாவை வளர்க்க, தோட்டக்கலைத் துறையினர், உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.