திண்டுக்கல்: பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் ரோப்கார் பராமரிப்பு பணிகள் நிறைவுபெற்ற நிலையில் மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கப்பட்டது.
திண்டுக்கல்: பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் ரோப்கார் பராமரிப்பு பணிகள் நிறைவுபெற்ற நிலையில் மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு வயதான மற்றும் குழந்தைகளுடன் வரும் பக்தர்களின் வசதிக்காக திருக்கோயில் சார்பில் மின் இழுவை ரயில் மற்றும் ரோப்கார் சேவை இயங்கி வருகிறது. பராமரிப்புப் பணிக்காக ரோப்கார் மாதம் ஒரு நாளும், வருடத்துக்கு ஒரு மாதமும் நிறுத்தப்படுவது வழக்கம்.
இந்நிலையில், வருடாந்திர, மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நிறைவுபெற்ற நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை கீழ்தளத்தில் உள்ள டிரைவ்சீவ் சாப்ட் பழுதாகியிருந்தது தெரியவந்ததால் உடனடியாக ரோப்கார் நிறுத்தப்பட்டு பராமரிப்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து, பழுதுகள் சரிசெய்யப்பட்டு இன்று சோதனை ஓட்டம் நடைபெற்றது. சோதனை ஓட்டம் சரியாக உள்ள நிலையில் இன்று மாலை அல்லது நாளை காலை முதல் பக்தர்கள் பயன்பாட்டிற்கு ரோப்கார் இயக்கப்படும் என திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு வயதான மற்றும் குழந்தைகளுடன் வரும் பக்தர்களின் வசதிக்காக திருக்கோயில் சார்பில் மின் இழுவை ரயில் மற்றும் ரோப்கார் சேவை இயங்கி வருகிறது. பராமரிப்புப் பணிக்காக ரோப்கார் மாதம் ஒரு நாளும், வருடத்துக்கு ஒரு மாதமும் நிறுத்தப்படுவது வழக்கம்.
இந்நிலையில், வருடாந்திர, மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நிறைவுபெற்ற நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை கீழ்தளத்தில் உள்ள டிரைவ்சீவ் சாப்ட் பழுதாகியிருந்தது தெரியவந்ததால் உடனடியாக ரோப்கார் நிறுத்தப்பட்டு பராமரிப்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து, பழுதுகள் சரிசெய்யப்பட்டு இன்று சோதனை ஓட்டம் நடைபெற்றது. சோதனை ஓட்டம் சரியாக உள்ள நிலையில் இன்று மாலை அல்லது நாளை காலை முதல் பக்தர்கள் பயன்பாட்டிற்கு ரோப்கார் இயக்கப்படும் என திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.