சொத்துவரியை மறு பரிசீலனை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதற்கு தொழில் அமைப்பினர் வரவேற்பு

கோவை: தமிழகத்தில் மாநகாட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் வாழும் மக்கள் பழைய சொத்துவரியை செலுத்தினால் போதும் என்ற அரசின் அறிவிப்பிற்கு கொடிசியா வரவேற்பு தெரிவித்துள்ளது


கோவை: தமிழகத்தில் மாநகாட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் வாழும் மக்கள் பழைய சொத்துவரியை செலுத்தினால் போதும் என்ற அரசின் அறிவிப்பிற்கு கொடிசியா வரவேற்பு தெரிவித்துள்ளது

கடந்த சில மாதங்களுக்கு முன்‌ தமிழகத்தில்‌ தொழில்‌, வணிக நிறுவனங்கள்‌ மற்றும்‌ வீடுகளுக்கான சொத்துவரி உயர்வுக்கான அறிவிப்பு வெளியானது. அதன்படி தொழில்‌ வணிக நிறுவனங்களுக்கு 100% வரி உயர்வும்‌, வீடுகளுக்கு 50% வரி உயர்வும்‌ விதிக்கப்பட்டு, அது 01.04.2012ம்‌ தேதி என்ற முன்‌ தேதியிலிருந்து கட்டப்பட வேண்டும்‌ என்று தெரிவிக்கப்பட்டது. இதனால்‌ மக்களும்‌, தொழில்‌, வணிக நிறுவனங்களை நடத்துவோரும்‌ கடுமையாக பாதிக்கப்படுவார்கள்‌ என்ற நிலை ஏற்பட்டது.

இதுதொடர்பாக, கோவை மாவட்ட சிறுதொழில்கள்‌ சங்கமான கொடிசியா தலைவர் ராமமூர்த்தி, சீமா தலைவர் கிருஷ்ணகுமார், சைமா இணைச் செயலாளர் கணேஷ் மற்றும் கோவையின்‌ பல தொழில்‌ வணிக அமைப்புகளுடன்‌ இணைந்து நகராட்சி நிர்வாகம்‌ மற்றும்‌ ஊரக வளர்ச்சி, சிறப்புத்‌ திட்ட செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி, அவர்களை சந்தித்து வரி உயர்வை குறைக்கும்படி கோரிக்கை வைத்தனர். மேலும்‌ தமிழக அரசின்‌ நகராட்சி நிர்வாகம்‌ மற்றும்‌ குடிநீர்‌ வேண்டுகோள்‌ மூலம்‌ வரி உயர்வை குறைக்கும்படி மனு அளித்தனர்.

இதனையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, சொத்து வரி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. பழைய வரிப்படி செலுத்தினால் போதும் என்றும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, உயர்த்தப்பட்ட சொத்துவரியை குறைப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இந்நிலையில், சொத்துவரியை மறு பரிசீலனை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதற்கும் ஏற்கனவே கூடுதலாக செலுத்திய சொத்து வரி, செலுத்தியவர்களின்‌ சொத்து வரி கணக்கில்‌ அடுத்த அரையாண்டுகளில்‌ ஈடு செய்யப்படும்‌ என்ற அரசின் அறிவிப்பிற்கு கொடிசியா வரவேற்பு தெரிவித்துள்ளது.

மேலும், தொழில்‌ மற்றும்‌ பொருளாதார சூழல்‌ மந்தமாக உன்ள நிலையில்‌ தங்களின்‌ கோரிக்கையை ஏற்று “சொத்து வரி உயர்வை" நிறுத்தி வைத்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் எஸ்‌.பி.வேலுமணி அவர்களுக்கு கொடிசியாவின்‌ சார்பில்‌ நன்றி தெரிவிப்பதாக கொடிசியா தலைவர் ராமமூர்த்தி கூறியுள்ளார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...