கோவை: சொத்துவரி மறுபரிசீலனை செய்ய மூன்று நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்ற உள்ளாட்சித்துறை அமைச்சரின் அறிக்கை தேர்தலை மனதில் கொண்டு வெளியிடப்பட்டுள்ளதாக திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் விமர்சித்துள்ளார்.
கோவை: சொத்துவரி மறுபரிசீலனை செய்ய மூன்று நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்ற உள்ளாட்சித்துறை அமைச்சரின் அறிக்கை தேர்தலை மனதில் கொண்டு வெளியிடப்பட்டுள்ளதாக திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் விமர்சித்துள்ளார்.

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் வடகோவையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், கோவை மாநகராட்சி குடிநீர் விநியோகத்தை சூயஸ் நிறுவனத்துடன் 26 ஆண்டுகளுக்குப் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரி பொதுமக்கள் மற்றும் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டதாகவும் மாநகராட்சி தேர்தல் நடைபெறாத நிலையில், மக்களிடம் கருத்து கேட்காமல் வெளிப்படைத் தன்மை இல்லாமல் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டினார்.
மேலும், பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாத மாநகராட்சியை கண்டித்தும் வரும் 28ம் தேதி தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்த அவர், சொத்துவரி 2018ம் ஆண்டு 100 சதவீதம் உயர்த்தப்பட்டதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், தற்போது சொத்துவரி மறுபரிசீலனை செய்ய மூன்று நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்ற உள்ளாட்சித்துறை அமைச்சரின் அறிக்கை, தேர்தலை மனதில் கொண்டு வெளியிடப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.
வார்டு மறுவரையில் பல்வேறு குழறுபடிகள் உள்ளதாகவும் அதிமுகவிற்கு சாதகமாக வார்டுகள் பிரிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், மக்கள் பிரச்சனைகளுக்கு ஜனநாயக அறவழியில் போராட்டம் நடத்த கூட அனுமதி மறுக்கப்படுவதாகவும் வரும் 28ம் தேதி அனுமதி மறுக்கப்பட்டால் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் வடகோவையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், கோவை மாநகராட்சி குடிநீர் விநியோகத்தை சூயஸ் நிறுவனத்துடன் 26 ஆண்டுகளுக்குப் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரி பொதுமக்கள் மற்றும் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டதாகவும் மாநகராட்சி தேர்தல் நடைபெறாத நிலையில், மக்களிடம் கருத்து கேட்காமல் வெளிப்படைத் தன்மை இல்லாமல் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டினார்.
மேலும், பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாத மாநகராட்சியை கண்டித்தும் வரும் 28ம் தேதி தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்த அவர், சொத்துவரி 2018ம் ஆண்டு 100 சதவீதம் உயர்த்தப்பட்டதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், தற்போது சொத்துவரி மறுபரிசீலனை செய்ய மூன்று நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்ற உள்ளாட்சித்துறை அமைச்சரின் அறிக்கை, தேர்தலை மனதில் கொண்டு வெளியிடப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.
வார்டு மறுவரையில் பல்வேறு குழறுபடிகள் உள்ளதாகவும் அதிமுகவிற்கு சாதகமாக வார்டுகள் பிரிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், மக்கள் பிரச்சனைகளுக்கு ஜனநாயக அறவழியில் போராட்டம் நடத்த கூட அனுமதி மறுக்கப்படுவதாகவும் வரும் 28ம் தேதி அனுமதி மறுக்கப்பட்டால் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.