தேர்தலை மனதில் கொண்டு சொத்துவரி மறுபரிசீலனை செய்ய மூன்று நபர் குழு: நா.கார்த்திக் விமர்சனம்

கோவை: சொத்துவரி மறுபரிசீலனை செய்ய மூன்று நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்ற உள்ளாட்சித்துறை அமைச்சரின் அறிக்கை தேர்தலை மனதில் கொண்டு வெளியிடப்பட்டுள்ளதாக திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் விமர்சித்துள்ளார்.

கோவை: சொத்துவரி மறுபரிசீலனை செய்ய மூன்று நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்ற உள்ளாட்சித்துறை அமைச்சரின் அறிக்கை தேர்தலை மனதில் கொண்டு வெளியிடப்பட்டுள்ளதாக திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் விமர்சித்துள்ளார்.



கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் வடகோவையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், கோவை மாநகராட்சி குடிநீர் விநியோகத்தை சூயஸ் நிறுவனத்துடன் 26 ஆண்டுகளுக்குப் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரி பொதுமக்கள் மற்றும் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டதாகவும் மாநகராட்சி தேர்தல் நடைபெறாத நிலையில், மக்களிடம் கருத்து கேட்காமல் வெளிப்படைத் தன்மை இல்லாமல் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டினார்.

மேலும், பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாத மாநகராட்சியை கண்டித்தும் வரும் 28ம் தேதி தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்த அவர், சொத்துவரி 2018ம் ஆண்டு 100 சதவீதம் உயர்த்தப்பட்டதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், தற்போது சொத்துவரி மறுபரிசீலனை செய்ய மூன்று நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்ற உள்ளாட்சித்துறை அமைச்சரின் அறிக்கை, தேர்தலை மனதில் கொண்டு வெளியிடப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

வார்டு மறுவரையில் பல்வேறு குழறுபடிகள் உள்ளதாகவும் அதிமுகவிற்கு சாதகமாக வார்டுகள் பிரிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், மக்கள் பிரச்சனைகளுக்கு ஜனநாயக அறவழியில் போராட்டம் நடத்த கூட அனுமதி மறுக்கப்படுவதாகவும் வரும் 28ம் தேதி அனுமதி மறுக்கப்பட்டால் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...