கோவை: வால்பாறையில் உள்ள அய்யர்பாடி பகுதியில் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: வால்பாறையில் உள்ள அய்யர்பாடி பகுதியில் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அய்யர்பாடி தேயிலை தோட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களது சம்பளம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. மாதந்தோறும் 10ம் தேதிக்கு மேல் வால்பாறைக்கு சென்று மணிக்கணக்கில் வரிசையில் நின்று மிகுந்த சிரமத்திற்கிடையில் சம்பளம் பெற்று வந்தனர்.
இதனையடுத்து இவர்களது சிரமத்தை போக்க கடந்த 9ம் தேதி அய்யர்பாடி தபால் நிலையம் அருகில் ஆக்சிஸ் வங்கி சார்பில் ஏ.டி.எம் மையம் துவக்கி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலையில் வேலைக்குச் சென்ற தொழிலாளர்கள் ஏ.டி.எம்மில் பணம் எடுக்க சென்றுள்ளனர். அப்போது ஏ.டி.எம் இயந்திரத்தின் கீழ்பகுதி உடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து வந்த வால்பாறை டி.எஸ்.பி விவேகானந்தன், ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் உளவு பிரிவு காவலர்கள், காவல்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தடவியல் நிபுணர்கள் அங்கு பதிந்துள்ள கைரேகைகளைச் சேகரித்து வருகின்றனர்,
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அய்யர்பாடி தேயிலை தோட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களது சம்பளம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. மாதந்தோறும் 10ம் தேதிக்கு மேல் வால்பாறைக்கு சென்று மணிக்கணக்கில் வரிசையில் நின்று மிகுந்த சிரமத்திற்கிடையில் சம்பளம் பெற்று வந்தனர்.
இதனையடுத்து இவர்களது சிரமத்தை போக்க கடந்த 9ம் தேதி அய்யர்பாடி தபால் நிலையம் அருகில் ஆக்சிஸ் வங்கி சார்பில் ஏ.டி.எம் மையம் துவக்கி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலையில் வேலைக்குச் சென்ற தொழிலாளர்கள் ஏ.டி.எம்மில் பணம் எடுக்க சென்றுள்ளனர். அப்போது ஏ.டி.எம் இயந்திரத்தின் கீழ்பகுதி உடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து வந்த வால்பாறை டி.எஸ்.பி விவேகானந்தன், ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் உளவு பிரிவு காவலர்கள், காவல்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தடவியல் நிபுணர்கள் அங்கு பதிந்துள்ள கைரேகைகளைச் சேகரித்து வருகின்றனர்,