கோவை: கோவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மாவோயிஸ்ட் தீபக்கை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் அந்த மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
கோவை: கோவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மாவோயிஸ்ட் தீபக்கை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் அந்த மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
கோவை அரசு மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த மாவோயிஸ்ட் தீபக்கை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க கோரி தடாகம் போலிசார் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, மாவோயிஸ்ட் தீபக் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன், மாவோயிஸ்ட் தீபக்கை நேரில் சந்தித்து பேசிய பின்னர் தான் பதில் மனு தாக்கல் செய்ய முடியும் என தெரிவித்தார். இதனையடுத்து மனு மீதான விசாரணையை பிற்பகல் 3 மணிக்கு ஒத்திவைத்த நீதிபதி சக்திவேல் மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன், மற்றும் விஜயராகவன், சத்தியபாலன் ஆகியோர் அடங்கிய குழுவினரை மாவோயிஸ்ட் தீபக்கை சந்திக்க அனுமதி அளித்தார்.
நீதிபதி அளித்த உத்திரவு ஆணையுடன் அரசு மருத்துவமனைக்கு வழக்கறிஞர் குழுவினர் சென்றனர். ஆனால் மருத்துவமனை நிர்வாகமும், சிறை துறை அதிகாரிகளும் மாவோயிஸ்ட் தீபக்கை சந்திக்க அனுமதி மறுத்தனர்.
இதனையடுத்து பிற்பகல் மீண்டும் நீதிமன்றத்திற்கு வந்த வழகறிஞர். மோகன் நீதிபதி சக்திவேலிடம் இதுகுறித்து முறையிட்டார்.
மேலும், அரசு தரப்பில் மாவோயிஸ்ட் தீபக்கை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்ற மனுவை காவல் துறையினர் திரும்ப பெறுவதாக நீதிபதியிடம் முறையிட்டனர்.
இந்நிலையில், தடாகம் போலீசார் போலீஸ் காவலுக்கு கொடுக்கப்பட்டிருந்த மனு மீதான விசாரணையில் நீதிபதி சக்திவேல் மனுவை தள்ளுபடி செய்தார்.
இதனைத்தொடர்ந்து மாவோயிஸ்ட் தரப்பு வழகறிஞர் ப.பா.மோகன் செய்தியாளர்களிடம் கூறும்போது:-
குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கறிஞரை சந்திப்பது என்பது அடிப்படை உரிமை. மாவோயிஸ்ட் தீபக்கை சந்திக்க நீதிமன்றம் உத்திரவு வழங்கியும் மருத்துவமனை நிர்வாகமும், சிறைதுறையும் அனுமதி மறுத்துள்ளது.
தீபக்கை கோவை காவல் துறை திட்டமிட்டு பிடித்து தாக்கி அவரை காயப்படுத்தி இருக்கின்றது. தீபக்கின் உயிருக்கு காவல் துறையால் ஆபத்து உள்ளது. இந்த தகவல் குறித்து நீதிமன்றத்தில் பதிவு செய்து இருக்கின்றோம்.
நீதிமன்றம் உத்திரவு வழங்கியும் சந்திக்க விடாமல் இருந்த அரசு மருத்துவமனை உதவி இருப்பிட மருத்துவ அலுவலர், சிறைதுறை அதிகாரி உட்பட அரசு அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தீபக் கோவை மத்திய சிறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாற்றப்பட்டார்.
கோவை அரசு மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த மாவோயிஸ்ட் தீபக்கை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க கோரி தடாகம் போலிசார் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, மாவோயிஸ்ட் தீபக் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன், மாவோயிஸ்ட் தீபக்கை நேரில் சந்தித்து பேசிய பின்னர் தான் பதில் மனு தாக்கல் செய்ய முடியும் என தெரிவித்தார். இதனையடுத்து மனு மீதான விசாரணையை பிற்பகல் 3 மணிக்கு ஒத்திவைத்த நீதிபதி சக்திவேல் மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன், மற்றும் விஜயராகவன், சத்தியபாலன் ஆகியோர் அடங்கிய குழுவினரை மாவோயிஸ்ட் தீபக்கை சந்திக்க அனுமதி அளித்தார்.
நீதிபதி அளித்த உத்திரவு ஆணையுடன் அரசு மருத்துவமனைக்கு வழக்கறிஞர் குழுவினர் சென்றனர். ஆனால் மருத்துவமனை நிர்வாகமும், சிறை துறை அதிகாரிகளும் மாவோயிஸ்ட் தீபக்கை சந்திக்க அனுமதி மறுத்தனர்.
இதனையடுத்து பிற்பகல் மீண்டும் நீதிமன்றத்திற்கு வந்த வழகறிஞர். மோகன் நீதிபதி சக்திவேலிடம் இதுகுறித்து முறையிட்டார்.
மேலும், அரசு தரப்பில் மாவோயிஸ்ட் தீபக்கை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்ற மனுவை காவல் துறையினர் திரும்ப பெறுவதாக நீதிபதியிடம் முறையிட்டனர்.
இந்நிலையில், தடாகம் போலீசார் போலீஸ் காவலுக்கு கொடுக்கப்பட்டிருந்த மனு மீதான விசாரணையில் நீதிபதி சக்திவேல் மனுவை தள்ளுபடி செய்தார்.
இதனைத்தொடர்ந்து மாவோயிஸ்ட் தரப்பு வழகறிஞர் ப.பா.மோகன் செய்தியாளர்களிடம் கூறும்போது:-
குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கறிஞரை சந்திப்பது என்பது அடிப்படை உரிமை. மாவோயிஸ்ட் தீபக்கை சந்திக்க நீதிமன்றம் உத்திரவு வழங்கியும் மருத்துவமனை நிர்வாகமும், சிறைதுறையும் அனுமதி மறுத்துள்ளது.
தீபக்கை கோவை காவல் துறை திட்டமிட்டு பிடித்து தாக்கி அவரை காயப்படுத்தி இருக்கின்றது. தீபக்கின் உயிருக்கு காவல் துறையால் ஆபத்து உள்ளது. இந்த தகவல் குறித்து நீதிமன்றத்தில் பதிவு செய்து இருக்கின்றோம்.
நீதிமன்றம் உத்திரவு வழங்கியும் சந்திக்க விடாமல் இருந்த அரசு மருத்துவமனை உதவி இருப்பிட மருத்துவ அலுவலர், சிறைதுறை அதிகாரி உட்பட அரசு அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தீபக் கோவை மத்திய சிறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாற்றப்பட்டார்.