கோவை: தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படையால் கோவை மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் தீபக்கை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி தடாகம் காவல் துறையினர் மனு தாக்கல் செய்துள்ளதையடுத்து மனு மீதான விசாரணை நடைபெற்றது.
கோவை: தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படையால் கோவை மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் தீபக்கை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி தடாகம் காவல் துறையினர் மனு தாக்கல் செய்துள்ளதையடுத்து மனு மீதான விசாரணை நடைபெற்றது.
தமிழ்நாடு சிறப்பு அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் தீபக் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதைத்தொடர்ந்து அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தடாகம் போலீசார் கோவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
கோவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சக்திவேல் விசாரணை செய்து உள்ளார். இதைத்தொடர்ந்து மாவோயிஸ்ட் தீபக் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் ஆஜராகி தீபக்கை சந்தித்துப் பேச போலீசார் இதுவரை அனுமதிக்கவில்லை என தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி சக்திவேல், மாவோயிஸ்ட் தீபக்கை வழக்கறிஞர்கள் நேரில் சந்தித்து பேச அனுமதி அளித்துள்ளார். மாவோயிஸ்ட் தீபக்கை மருத்துவமனையில் சந்தித்த பின்பு, பிற்பகல் பதில் மனுதாக்கல் செய்யும் படியும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

இதைத்தொடர்ந்து அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் மாவோயிஸ்ட் தீபக்கை சிறைவாசிகள் சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றியுள்ளனர்.
தமிழ்நாடு சிறப்பு அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் தீபக் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதைத்தொடர்ந்து அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தடாகம் போலீசார் கோவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
கோவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சக்திவேல் விசாரணை செய்து உள்ளார். இதைத்தொடர்ந்து மாவோயிஸ்ட் தீபக் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் ஆஜராகி தீபக்கை சந்தித்துப் பேச போலீசார் இதுவரை அனுமதிக்கவில்லை என தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி சக்திவேல், மாவோயிஸ்ட் தீபக்கை வழக்கறிஞர்கள் நேரில் சந்தித்து பேச அனுமதி அளித்துள்ளார். மாவோயிஸ்ட் தீபக்கை மருத்துவமனையில் சந்தித்த பின்பு, பிற்பகல் பதில் மனுதாக்கல் செய்யும் படியும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

இதைத்தொடர்ந்து அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் மாவோயிஸ்ட் தீபக்கை சிறைவாசிகள் சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றியுள்ளனர்.