கோவை: கோவை பெரியநாய்க்கன்பாளையம் அருகே உணவுதேடி வந்த காட்டு யானைகளை வனத்துறையினர் விரட்ட முயன்ற போது, அங்கிருந்த டிரான்ஸ்பார்மர் மீது யானைகள் மோதியதில் மின்சார கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி தீப்பொறி ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக யானைகள் உயிர் தப்பின.
கோவை: கோவை பெரியநாய்க்கன்பாளையம் அருகே உணவுதேடி வந்த காட்டு யானைகளை வனத்துறையினர் விரட்ட முயன்ற போது, அங்கிருந்த டிரான்ஸ்பார்மர் மீது யானைகள் மோதியதில் மின்சார கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி தீப்பொறி ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக யானைகள் உயிர் தப்பின.
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய ஆனைகட்டி, மாங்கரை, பாலமலை, தடாகம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காட்டு யானைகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் புகுந்து சேதங்களை விளைவித்து வருகின்றன.
இந்நிலையில், இன்று அதிகாலை மணியளவில் கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்த நாய்க்கன்பாளையம் பகுதியில் 5 யானைகள் கொண்ட காட்டு யானைகள் கூட்டம் உணவு தேடி வந்துள்ளன. இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள், உடனடியாக பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், காட்டு யானைகளை விரட்ட முயன்றனர். அப்போது, யானைகள் கூட்டம் எதிர்பாராத விதமாக அங்கிருந்த டிரான்ஸ்பார்மர் மீது மோதியது.

இதனால், மின்சார கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி தீப்பொறி ஏற்பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக யானைகள் அனைத்தும் உயிர் தப்பின.

உணவுகள் தேடி காட்டு யானைகள் அடிக்கடி கூட்டமாக குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வரும் நிலையில், வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.