கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் வனத்துறை காவலர்களுக்காக கட்டப்பட்ட குடியிருப்புகளுக்குள் புகுந்த காட்டுயானைகள் வீட்டின் கதவு, ஜன்னலை உடைத்து சேதப்படுத்தியது.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் வனத்துறை காவலர்களுக்காக கட்டப்பட்ட குடியிருப்புகளுக்குள் புகுந்த காட்டுயானைகள் வீட்டின் கதவு, ஜன்னலை உடைத்து சேதப்படுத்தியது.
வால்பாறையை அடுத்துள்ள சின்கோனா பகுதியில் தமிழ்நாடு தேயிலை தோட்டக்கழகத்தில் 3000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இப்பகுதியின் நுழை வாயிலில் மானாம்பள்ளி வனச்சரகத்தின் சோதனை சாவடி அமைந்துள்ளது.
இங்கு பணியாற்றும் வனத்துறை காவலர்களுக்காக 5 குடியிருப்புகள் கட்டப்பட்டு வசித்து வருகிறார்கள். இந்நிலையில், காவலர்கள் பணி நிமித்தமாக வெளியே சென்றிருந்த போது, 5 காட்டுயானைகள் குடியிருப்பை முற்றுகையிட்டன. பின்னர், வீட்டின் கதவு, ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து அரிசி, பருப்பை தின்றதுடன் அங்கு இருந்த பாத்திரங்கள், கட்டில் மேஜைகளை உடைத்து நாசப்படுத்தியது.

பின்னர் இதுகுறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர், பல மணிநேர போராட்டத்திற்குப்பின் காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
வால்பாறையை அடுத்துள்ள சின்கோனா பகுதியில் தமிழ்நாடு தேயிலை தோட்டக்கழகத்தில் 3000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இப்பகுதியின் நுழை வாயிலில் மானாம்பள்ளி வனச்சரகத்தின் சோதனை சாவடி அமைந்துள்ளது.
இங்கு பணியாற்றும் வனத்துறை காவலர்களுக்காக 5 குடியிருப்புகள் கட்டப்பட்டு வசித்து வருகிறார்கள். இந்நிலையில், காவலர்கள் பணி நிமித்தமாக வெளியே சென்றிருந்த போது, 5 காட்டுயானைகள் குடியிருப்பை முற்றுகையிட்டன. பின்னர், வீட்டின் கதவு, ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து அரிசி, பருப்பை தின்றதுடன் அங்கு இருந்த பாத்திரங்கள், கட்டில் மேஜைகளை உடைத்து நாசப்படுத்தியது.

பின்னர் இதுகுறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர், பல மணிநேர போராட்டத்திற்குப்பின் காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.