கோத்தகிரி பேருந்து நிலையம் மேற்புறத்தில் தொங்கும் பாறைகள்; உடனடியாக அகற்ற கோரிக்கை

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் பேருந்து நிலையம் மேற்புறமுள்ள ஆபத்தான நிலையில் தொங்கிக் கொண்டிருக்கும் பாறைகளை பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் பேருந்து நிலையம் மேற்புறமுள்ள ஆபத்தான நிலையில் தொங்கிக் கொண்டிருக்கும் பாறைகளை பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த பலத்த மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்நிலையில், கோத்தகிரி பேருந்து நிலையத்தில் மேல் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் அங்கிருந்து மண் குவியல்கள் பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியில் விழுந்தது. இரவுநேரம் என்பதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அப்பாேது இந்த மண் குவியல்களை மட்டும் பேரூராட்சி நிர்வாகம் அகற்றியது.



இந்நிலையில், மண் குவியல்கள் கீழே இறங்கியதால் தற்போது பாறைகள் ஆபத்தான நிலையில் தொங்கிக் கொண்டிருக்கிறது. கீழ்ப்பகுதியில் பேரூராட்சியின் சார்பில் கட்டப்பட்ட பேருந்து நிலையம், வங்கி ஏடிஎம், தாய்மார்கள் பாலூட்டும் அறை போன்றவை இருப்பதால் பெரும் விபத்துக்கள் ஏற்படும் முன் இந்த பாறைகளை பேரூராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....