ஆதிவாசி சிறுவர் சிறுமியரின் ஆண்டு விழா; தன்னம்பிக்கையுடன் வாழ்வில் உயர்ந்த நிலைக்கு வரலாம் - சமூக ஆர்வலர் அப்சரா

நீலகிரி: நீலகிரி மாவட்டம் ஆதிவாசி மக்கள் தன்னம்பிக்கையுடன் வாழ்வில் உயர்ந்த நிலைக்கு வரலாம் என சமூக ஆர்வலர் அப்சரா தெரிவித்தார்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் ஆதிவாசி மக்கள் தன்னம்பிக்கையுடன் வாழ்வில் உயர்ந்த நிலைக்கு வரலாம் என சமூக ஆர்வலர் அப்சரா தெரிவித்தார்.



நீலகிரி மாவட்டம் ஆதிவாசி சிறுவர் சிறுமியரின் ஆண்டு விழா கோத்தகிரி ஆதிவாசிகள் நல சங்க அமைப்பான நாவா சார்பில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட சமூகசேவகி திருநங்கை அப்சரா பேசுகையில், வாழ்க்கையில் தொடர் முயற்சி மேற்கொண்டால் மிக நிச்சயமாக நல்ல இடத்தை அடைய முடியும் என்றார்.

மேலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கொடுத்த ஆதரவால், தான் தற்போது சமூகத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பதாகவும் கல்வியிலும் விளையாட்டிலும் பெற்றோர்கள் ஊக்கம் அளித்தால் குழந்தைகள் நல்ல நிலையை அடைவார்கள் என்றும் எந்த ஆட்சி வந்தாலும் ஆதிவாசி மக்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களின் வாழ்வாதாரம் மேலோங்கச் செய்யவேண்டும் என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், ஆதிவாசிகள் நல சங்க செயலாளர் ஆல்வாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக விக்டோரியா ஆம்ஸ்ட்ராங் பள்ளி ஆதிவாசி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதில் மாணவ, மாணவிகளின் இயற்கையை குறித்த விழிப்புணர்வு குறு நாடகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விக்டோரியா ஆம்ஸ்ட்ராங்க் ஆதிவாசிகள் பள்ளி இயக்குனர் விஜயகுமார், பள்ளியின் முதல்வர் பூவிழி உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...