உதகையில் 65 கோடி குத்தகை செலுத்தாத கோல்ப் கிளப் நிலம் கையகம்

நீலகிரி: உதகை அருகே 65 கோடி குத்தகை செலுத்தாத தனியார் கோல்ப் கிளப் நிலத்தை உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி வனத்துறையினர் கையகப்படுத்தினர்

நீலகிரி: உதகை அருகே 65 கோடி குத்தகை செலுத்தாத தனியார் கோல்ப் கிளப் நிலத்தை உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி வனத்துறையினர் கையகப்படுத்தினர்



நீலகிரி மாவட்டம் உதகை பிங்கர் போஸ்ட் அருகே ஜிம்கான எனப்படும் தனியார் கோல்ப் கிளப் செயல்பட்டு வருகிறது. இந்த கிளப்பில் பிரபலமான பணக்காரர்கள் மட்டும் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். அங்கு, அவர்கள் தங்க சொகுசு பங்களாவும், கோலஃப் விளையாட 78 ஏக்டரில் பச்சை பசேல் மைதானமும் உள்ளது.



மாநில மற்றும் தேசிய அளவில் போட்டிகள் நடைபெறும் இந்த கோல்ஃப் மைதானம் வனத்துறைக்கு சொந்தமானதாகும். வனத்துறையால் இந்த நிலம் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. இந்த குத்தகை காலம் முடிந்ததோடு இதுவரை அந்த கிளப் நிர்வாகம் வனத்துறைக்கு 50 காேடி ரூபாயையும், வருவாய்த்துறைக்கு 15 கோடி ரூபாயும் குத்தகை பாக்கி வைத்துள்ளது.

இது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோல்ப் கிளப் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தை கையகப்படுத்த உத்தரவிட்டனர். இதையடுத்து நீலகிரி வனக்கோட்ட வனத்துறை அதிகாரி குருசாமி மற்றும் சரவணன் ஆகியோர் தனியார் காேல்ஃப் கிளப் நிர்வாகிகளிடமிருந்து முறைப்படி எழுத்து மூலம் நிலத்தை பெற்றுக் கொண்டனர்.



இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, வனத்துறை வசம் வந்துள்ள 35 எக்டேர் நிலத்தை பாதுகாக்கப்பட்ட நிலமாக வனத்துறை பராமரிக்கும் என்றும் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தனியார் அமைத்திருந்த கம்பி வேலி விரைவில் அகற்றப்படும் என்று தெரிவித்தார்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....