நீலகிரி: குன்னூர் ரயில் நிலையத்தில் கழிவறையின் வெளிப்புற சுவற்றில் வரையப்பட்டிருந்த திருவள்ளுவர் ஓவியம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது அழிக்கப்பட்டது.
நீலகிரி: குன்னூர் ரயில் நிலையத்தில் கழிவறையின் வெளிப்புற சுவற்றில் வரையப்பட்டிருந்த திருவள்ளுவர் ஓவியம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது அழிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் ரயில் நிலையத்தில் தமிழர் பண்பாட்டை பறைசாற்றும் வகையில் பல்வேறு ஓவியங்கள் கழிப்பறையின் வெளிச் சுவற்றில் வரையப்பட்டிருந்தது.
இந்த ஓவியங்களில் திருவள்ளுவரின் ஓவியம் கழிவறை வெளிப்புறத்தில் வரையப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொது நல அமைப்புகள் இந்த ஓவியத்தை அழிக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகத்தை கேட்டுக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்திய கழிப்பறையின் வெளிசுவற்றில் வரையப்பட்டிருந்த திருவள்ளுவர் ஓவியத்தை அதிகாரிகள் அழித்தனர். இதன் காரணமாக போராட்டத்தில் ஈடுபடவிருந்த தமிழ் அமைப்புகள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் ரயில் நிலையத்தில் தமிழர் பண்பாட்டை பறைசாற்றும் வகையில் பல்வேறு ஓவியங்கள் கழிப்பறையின் வெளிச் சுவற்றில் வரையப்பட்டிருந்தது.
இந்த ஓவியங்களில் திருவள்ளுவரின் ஓவியம் கழிவறை வெளிப்புறத்தில் வரையப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொது நல அமைப்புகள் இந்த ஓவியத்தை அழிக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகத்தை கேட்டுக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்திய கழிப்பறையின் வெளிசுவற்றில் வரையப்பட்டிருந்த திருவள்ளுவர் ஓவியத்தை அதிகாரிகள் அழித்தனர். இதன் காரணமாக போராட்டத்தில் ஈடுபடவிருந்த தமிழ் அமைப்புகள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.