ஒருபுறம் கேன்சர் கட்டி அகற்றி சாதனை; மறுபுறம் நோயாளியை 10 நாட்கள் அலைக்கழித்த அவலம் - கோவை அரசு மருத்துவமனை மீது புகார்

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் கேன்சர் கட்டியை நவீன முறையில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றியது தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே, பத்து நாட்களாகியும் சிகிச்சையை கொடுக்காமல் நோயாளியை அலைக்கழிக்கும் மருத்துவ பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை அரசு மருத்துவமனையில் கேன்சர் கட்டியை நவீன முறையில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றியது தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே, பத்து நாட்களாகியும் சிகிச்சையை கொடுக்காமல் நோயாளியை அலைக்கழிக்கும் மருத்துவ பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் 5 ஆயிரம் முதல் 7000 வெளி நோயாளிகளும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனர். அதேபோல, இங்கு கோவை உட்பட திருப்பூர், ஈரோடு, நீலகிரி போன்ற பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தை சேர்ந்த 55 வயது மூதாட்டி வீரம்மாள், வயிற்று வலி காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுநீரகத்தில் ராட்சத கேன்சர் கட்டி இருப்பதை கண்டுபிடித்தனர்.



அதனை ரீனஆஞ்கியோ எம்பாலிஷேசன் மூலம் அந்த கட்டியின் அளவு மற்றும் எடையை குறைத்து, கட்டி 8 சென்டிமீட்டராக குறைந்த பின் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை கோவை அரசு மருத்துவமனையில் முதல் முறையாக செய்யப்பட்டுள்ளது.

இந்த வெற்றிகரமான அறுவை சிகிச்சை தொடர்பாக கோவை அரசு மருத்துவமனையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்கள் வெளியே வந்த போது, பத்து நாட்களுக்கு மேலாக அலைக்கழிக்கப்பட்டு வரும் நோயாளியின் உறவினர்கள் கதறி அழுதபடி சிகிச்சை வேண்டி மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் மனு அளித்தனர்.

இதுகுறித்து நோயாளியின் மகன் சதீஷ் கூறும்போது:-

எனது தந்தை அந்தோணியை கோவை அரசு மருத்துவமனையில் பத்து நாட்களுக்கு முன்பு அனுமதித்தேன். இதுவரை உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க மருத்துவர் உதவி தேவைப்படுகிறது. நோயாளியை அழைத்துச் செல்ல ஸ்ட்ரெச்சர் தள்ளும் பணியாளர்களின் உதவி தேவைப்படுகிறது. அதே போல, ஸ்கேன் எடுக்க ஸ்கேன் நிலையத்தினரின் உதவி தேவைப்படுகிறது. ஆனால் மூன்று பேரும் பல காரணங்களைச் சொல்லி இன்னும் எம்ஆர்ஐ ஸ்கேன் கூட எடுக்க முயற்சிக்கவில்லை என்றார்.



மேலும், எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க வேண்டும் என்பதற்காக தினமும் தனது தந்தைக்கு உணவு கூட கொடுக்கவில்லை என்றும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது இருந்ததை விட, தற்போது அவரது உடல்நிலை மிகவும் மோசமாகியுள்ளதாக கூறிய அவர், ஸ்ட்ரெச்சர் தள்ளுவதற்கும் ஒவ்வொரு முறையும் 100 ரூபாய் கேட்கின்றனர் என்றும் இல்லையென்றால் ஸ்ட்ரெச்சர் தர மறுப்பதாக வேதனையுடன் தெரிவித்தார்.

Newsletter

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...