வால்பாறையில் சோதனைச் சாவடியில் வன ஊழியரை தாக்க முயன்ற கேரளாவைச் சேர்ந்த 5 பேர் கைது.

கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள சோலையார் அணை அருகே உள்ள மழுக்கப்பாறை எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள வனத்துறையின் சோதனைச்சாவடியிள் பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறை ஊழியர்களை தாக்க முற்பட்ட ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள சோலையார் அணை அருகே உள்ள மழுக்கப்பாறை எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள வனத்துறையின் சோதனைச்சாவடியிள் பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறை ஊழியர்களை தாக்க முற்பட்ட ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 



வழக்கமாக, கேரளா மாநிலம் சாலக்குடியிலிருந்து வால்பாறைக்கு ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். இந்த வாகனங்கள் சோதனைச்சாவடியில் சோதனைக்குப்பின் தான் அனுமதிக்கப்படும். 



இந்நிலையில், இன்று கேரள மாநிலம் நெம்மாராவிலிருந்து வால்பாறை வழியாக மழுக்கப்பாறையில் திருமண நிகழ்ச்சிக்கு ஒன்றில் பங்குபெற காரில் 10 பேர் வந்துள்ளனர். அப்போது, சோதனை சாவடியில் சோதனையிட்ட போது காரில் மது பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் அவர்களை வனத்துறை ஊழியர்கள் விசாரணை செய்ய முற்பட்டனர். 

அப்போது, காரில் இருந்த பயணிகள் வனத்துறை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், மேலும் தகாத வார்த்தைகள் பேசி வனத்துறை ஊழியர்களை தாக்க முற்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் வனத்துறையினரை தாக்க முயன்ற கேரளாவைச் சேர்ந்த குமார், ஷாபு, ஷிபு, அப்துல், சிவராஜ் ஆகிய 5 பேரை கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். 

இச்சம்பவம் வனத்துறையினர மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....