நீலகிரியில் முதன் முறையாக இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல்: மாவட்ட ஆட்சியர்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் 1500க்கும் மேற்பட்ட வாக்காளர்களை கொண்ட 3 இடங்கள் இரண்டாகப் பிரிக்கப்படவுள்ளதாகவும் முதன் முறையாக இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் 1500க்கும் மேற்பட்ட வாக்காளர்களை கொண்ட 3 இடங்கள் இரண்டாகப் பிரிக்கப்படவுள்ளதாகவும் முதன் முறையாக இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

உள்ளாட்சித் தேர்தலுக்கான அனைத்து கட்சி கூட்டம் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 4 ஊராட்சி ஒன்றியங்கள், 4 நகராட்சிகள் மற்றும் 11 பேரூராட்சிகளில் தேர்தல் நடைபெற உள்ளதாக கூறினார்.

தற்போது, தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, ஊரகப் பகுதிகளில் அமைக்கப்படும் வாக்குச்சாவடிகளின் ஒரு வாக்குச்சாவடிக்கு 1,500 வாக்காளர்களுக்கு மிகவும், நகர்ப்புறப் பகுதிகளில் ஆயிரத்து 500 வாக்காளர்களுக்கு மிகாமலும் வாக்குச் சாவடி அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், ஊரக கூடலூர், குன்னூர் பகுதிகளில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இடங்களில் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருந்தால் அதை இரண்டு கட்டமாக பிரிக்கப்படும் என தெரிவித்தார்.

பின்னர், கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியினர் வாக்காளர்கள் பற்றிய தகவல்களை அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்த பின், தேர்தலுக்கான தகவல்களை இணையதளம் வாயிலாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....