திருப்பூர் அருகே வீடுகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட சிறுமி; போலீசாரிடம் ஒப்படைப்பு

திருப்பூர் அருகே வீடுகளில் திருட முயற்சி செய்த சிறுமியை பிடித்த அப்பகுதி பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர். சிசிடிவி காட்சிகளை கொண்டு தொடர்ந்து போலீசார் அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருப்பூர் அருகே வீடுகளில் திருட முயற்சி செய்த சிறுமியை பிடித்த அப்பகுதி பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர். சிசிடிவி காட்சிகளை கொண்டு தொடர்ந்து போலீசார் அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் அப்பாச்சி நகர் பகுதியில் சுமார் 500 குடியிருப்புகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் பின்னலாடை நிறுவனங்களில் உள்ள பொருட்கள் மற்றும் வீடுகளுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்கள் ஆகியவைகள் அடிக்கடி திருடப்பட்டு வந்துள்ளது.



இந்நிலையில், அந்த பகுதியில் உள்ள ஒரு சிறுமி பூட்டிய வீட்டினுள் ஏறி உள்ளே குதிக்க முயன்றுள்ளார். இதனையறிந்த அப்பகுதி பொதுமக்கள், அந்த சிறுமியை பிடித்து வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

பின்னர் தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வடக்கு போலீசார், சிறுமியை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் திருப்பூர் அம்பேத்கர் நகர் பகுதியில் வசிக்கும் 15 வயது மதிக்கத்தக்க சிறுமி என்பது தெரியவந்தது. மேலும், அங்கு கிடைத்த சிசிடிவி காட்சி வைத்துத் தொடர்ந்து போலீசார் அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....