கோவையில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ய முயன்ற நபர் கைது; 3 கிலோ கஞ்சா பறிமுதல்

கோவை : கோவை தடாகம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ய முயன்ற நபரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கோவை : கோவை தடாகம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ய முயன்ற நபரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

சமீபகாலமாக கோவை அதிகரித்து வரும் கஞ்சா விற்பனையானது, கல்லூரி மாணவர்கள் மற்றும் வடமாநிலத்தவரை குறிவைத்து நடைபெற்று வருகிறது. மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் பெரியய்யா உத்தரவின் பேரில் மாநகர மற்றும் மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் கஞ்சா விற்பனையாளர்களை கண்காணித்து கைது செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், தடாகம் செங்கல் சூளைகளில் பணிபுரியும் வடமாநிலத்தவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இதனையடுத்து, ஆய்வாளர் பாலமுரளி உத்தரவின் பேரில் நேற்று தடாகம் பகுதியில் உள்ள தடுப்பணை அருகே சந்தேகத்திற்கிடமாக சென்று கொண்டிருந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை செய்ததில், அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்பவர் என தெரியவந்தது.

இதையடுத்து, தடாகம் போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், அவர் கணுவாய் பகுதியை சேர்ந்த ராமசாமியின் மகன் பன்னீர்செல்வம் (34) என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரிடம் இருந்த 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....