கோவையைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சென்னையில் விசாரணை

கோவை : கோவையில் நேற்று இரண்டு இளைஞர்களிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதையடுத்து, இன்று சென்னையில் உள்ள அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை : கோவையில் நேற்று இரண்டு இளைஞர்களிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதையடுத்து, இன்று சென்னையில் உள்ள அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்த சமீர் (22), உக்கடம் முதல்வீதி அண்ணா நகரை சேர்ந்த சவுரிதீன் (30) ஆகியோர் வீட்டில் நேற்று காலை 6 மணி முதல் 10 மணி வரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையானது டிஎஸ்பி சாகுல் அமீது தலைமையில் நடைபெற்றது.

மேலும் இந்து இயக்கத் தலைவர்களை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்டவர்களுடன் முகநூல் தொடர்பில் இருந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக காவல்துறை வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, கைது செய்த இருவரையும் கோவை ரேஸ்கோர்ஸ் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், இருவரும் நேற்று மாலை வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். 

இப்படியிருக்க தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை சமீர், சவுரிதீன் ஆகிய இருவரும் சென்னை தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்தில் ஆஜராக சம்மன் கொடுத்துள்ளனர். இதையடுத்து இருவரும் சென்னையில் உள்ள அலுவலகத்தில் ஆஜராகினர். இதை தொடர்ந்து அதிகாரிகள் இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....