கோவையில் உள்ள மலை கிராமங்களில் மாவோயிஸ்ட் நடமாட்டம் குறித்து தகவல் அளிக்க மலைவாழ் மக்களுக்கு போலீசார் விழிப்புணர்வு

கோவை : கோவை மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட மலை கிராமங்களில் வசித்து வரும் மலைவாழ் மக்களிடம் மாவோயிஸ்ட் நடமாட்டம் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கோவை : கோவை மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட மலை கிராமங்களில் வசித்து வரும் மலைவாழ் மக்களிடம் மாவோயிஸ்ட் நடமாட்டம் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளா தண்டர்போல்ட் போலீஸாருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மொத்தம் நான்கு மாவோயிஸ்ட்கள் உயிரிழந்தனர்.



இந்த சம்பவத்தை அடுத்து கேரளாவை ஒட்டியுள்ள கோவை மாவட்ட மலையடிவாரங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் ஐபிஎஸ் உத்தரவின் பேரில் போலீசார் தொடர்ந்து ரோந்து பணியை அதிகரித்துள்ளனர்.

அதேபோல, ஆனைகட்டி அருகே உள்ள மாங்கரை செக்போஸ்ட் போன்ற பகுதிகளில் வாகனத் தணிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வாகன தணிக்கையை துப்பாக்கி ஏந்திய போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.



இந்தநிலையில் இன்று தொண்டாமுத்தூர், காருண்யா நகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கல்குத்திபதி, சாடிவயல்பதி, வெள்ளபதி, சிங்கப்பதி,பொட்டப்பதி ஆகிய மலைக்கிராமங்களில் மலைவாழ் மக்களுக்கு காவல்துறை சார்பாக மாவோயிஸ்டுகள் நடமாட்டம் தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அதேபோல காவல் துறை சார்பில் உடனடியாக தகவல் தெரிவிக்க தொலைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளது.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....