திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் பயன்பாட்டில் இல்லாத 3487 தனியார் ஆழ்துளை கிணறுகள் மற்றும் 2842 அரசு ஆழ்துளை கிணறுகள் அடையாளம் காணப்பட்டு அவை அனைத்தும் மூடப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் பயன்பாட்டில் இல்லாத 3487 தனியார் ஆழ்துளை கிணறுகள் மற்றும் 2842 அரசு ஆழ்துளை கிணறுகள் அடையாளம் காணப்பட்டு அவை அனைத்தும் மூடப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில், இரண்டு வயதுக் குழந்தை சுஜித் வில்சன் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து பலியான சம்பவத்தைத் தொடர்ந்து, பயனற்ற ஆழ்துளைக் கிணறுகளின் அபாயம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய கிணறுகளை மூடவும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பாக மாற்றவும் மாவட்ட நிர்வாகம் மூலம் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.
இந்த நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் பயன்பாடற்ற நிலையில் கண்டறியப்பட்ட 6329 ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டுள்ளதாக திருப்பூர் ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்தார். மேலும், பயனற்ற வேறு ஏதேனும் ஆழ்துளை கிணறுகள் மூடப்படாமல் இருந்தால் 9700041114 என்ற எண்ணிற்கு தகவல் அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில், இரண்டு வயதுக் குழந்தை சுஜித் வில்சன் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து பலியான சம்பவத்தைத் தொடர்ந்து, பயனற்ற ஆழ்துளைக் கிணறுகளின் அபாயம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய கிணறுகளை மூடவும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பாக மாற்றவும் மாவட்ட நிர்வாகம் மூலம் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.
இந்த நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் பயன்பாடற்ற நிலையில் கண்டறியப்பட்ட 6329 ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டுள்ளதாக திருப்பூர் ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்தார். மேலும், பயனற்ற வேறு ஏதேனும் ஆழ்துளை கிணறுகள் மூடப்படாமல் இருந்தால் 9700041114 என்ற எண்ணிற்கு தகவல் அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.