கோவை : கோவை மாவட்டம் வால்பாறை ஸ்ரீ சுப்ரமணியசுவாமி திருக்கோவிலில் 7ம் ஆண்டு கந்த சஷ்டி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
கோவை : கோவை மாவட்டம் வால்பாறை ஸ்ரீ சுப்ரமணியசுவாமி திருக்கோவிலில் 7ம் ஆண்டு கந்த சஷ்டி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
முன்னதாக கணபதி ஹோமம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுப்பிரமணிய சுவாமி மேளதாள வாத்தியத்துடன் கோவில் வளாகத்தை சுற்றி வந்தார்.
தீபாராதனைக்குப்பின் காலை 10.30 மணியளவில் சிறப்பு பூஜைகளுடன் கோவில் வளாகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் மந்திரங்கள் முழங்க அரோகரா கோசத்துடன் கொடி ஏற்றப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. தொடர்ந்து சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகமும் தீபாரதனைகளும் நடைபெற்றது.
தொடர்ந்து 2ம் தேதி சனிக்கிழமை சூரசம்கார நிகழ்ச்சியும் மறுநாள் திருக்கல்யாணமும் அன்னதானமும் நடைபெறுகிறது. மாலை சிங்காரி மேளம், சிக்காட்டம் மேளதாள வாத்தியத்துடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் தேவிகள் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் தேர்ப்பவனி நடை பெறுகிறது. இரவு கொடி இறக்கமும் நடைபெறுகிறது. தொடர்ந்து வாண வேடிக்கை நடைபெறுகிறது.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளைக் கந்த சஷ்டி விழா குழுவினர் சிறப்பாக செய்துள்ளனர். இந்த விழாவில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
முன்னதாக கணபதி ஹோமம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுப்பிரமணிய சுவாமி மேளதாள வாத்தியத்துடன் கோவில் வளாகத்தை சுற்றி வந்தார்.
தீபாராதனைக்குப்பின் காலை 10.30 மணியளவில் சிறப்பு பூஜைகளுடன் கோவில் வளாகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் மந்திரங்கள் முழங்க அரோகரா கோசத்துடன் கொடி ஏற்றப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. தொடர்ந்து சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகமும் தீபாரதனைகளும் நடைபெற்றது.
தொடர்ந்து 2ம் தேதி சனிக்கிழமை சூரசம்கார நிகழ்ச்சியும் மறுநாள் திருக்கல்யாணமும் அன்னதானமும் நடைபெறுகிறது. மாலை சிங்காரி மேளம், சிக்காட்டம் மேளதாள வாத்தியத்துடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் தேவிகள் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் தேர்ப்பவனி நடை பெறுகிறது. இரவு கொடி இறக்கமும் நடைபெறுகிறது. தொடர்ந்து வாண வேடிக்கை நடைபெறுகிறது.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளைக் கந்த சஷ்டி விழா குழுவினர் சிறப்பாக செய்துள்ளனர். இந்த விழாவில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.